கரோனா தடுப்பூசியை வழங்க 3 சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

கரோனா தடுப்பூசியை வழங்க 3 சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி,அக்.31, கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் இறுதிகட் டத்தை எட்டியுள்ள நிலையில், அவை பயன்பாட்டுக்கு வந்ததும், அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான முன்னேற்பாடுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.


இதுதொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான முன்னேற் பாடுகளை கவனிக்கவும், செயல் திட் டங்களை வகுக்கவும், மாநிலங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை சமா ளிக்கவும் தேவையான யுக்திகளை வகுக்கவும் அனைத்து மாநில அரசுகளும் குழுக்களை அமைக்க வேண்டும்.


ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.


கூடுதல் தலைமை செயலாளர் அல் லது முதன்மை செயலாளர் தலைமையில் மாநில செயல் குழு அமைக்கப்பட வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சி யர்கள் தலைமையில் மாவட்ட குழுக் களும் அமைக்கப்பட வேண்டும்.


இக்குழுவினர் மற்ற அனைத்து துறையினருடன் ஒருங்கிணைந்து கரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.


தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு, சுகாதாரத் துறையினரிட மிருந்து தொடங்கி பல பிரிவினரும் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, அவர்களை ஒருங் கிணைக்க சிறப்பு குழுக்களின் தேவை அவசியமாகும். இவ்வாறு கூறப்பட் டுள்ளது.


ராஜேஷ் பூஷண் தனது கடிதத்தில் மேலும், ‘சமூக வலைதளங்கள் மற்றும் பிற தளங்களில் கரோனா தடுப்பூசிகள் பற்றி புரளிகள், எதிர்மறையான விஷ யங்கள் பரப்புவதை ஆரம்பத்தில் இருந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற புரளிகள், பொதுமக்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுவதை பாதிக்கும்,’ என கூறப்பட்டுள்ளது.


 


No comments:

Post a Comment