மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டமியற்றவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சட்டமியற்றவேண்டும்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்



புதுடில்லி, செப்.29 மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், சட்டமியற்ற வேண்டும் என்று, காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவ சாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா ஆகிய விவசாயம் தொடர்பான 3 சட்ட மசோதாக்களை கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.


இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், இரு அவைகளிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார்.


இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் காரணமாக விவசாயிகள் கொத்தடி மைகளாக மாற்றப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாடு முழுக்க விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.


மத்திய அரசின் விவசாய சட்டங் களை எதிர்த்து, தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் நேற்று (28.9.2020) அறப்போராட்டத்தினை நடத்தின.


இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு ‘மரண சாசனம்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி  விமர்சனம் செய்திருந்தார்.


அதேநேரம் இந்தச் சட்டங்களுக்கு மாற்றாக தீர்வு அளிக்கும் வகையில் சோனியாகாந்தி ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்.


இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர் கே.சி.வேணுகோபால் தனது சமுக வலைதளப் பக்கத்தில் இதுபற்றி கூறியிருப்பதாவது:


காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை செயல்படுத்த முடியாது என கூறி, அரசியல் சாசனம் வழங்கியுள்ள சட்டப்பிரிவு 254 (2) கீழ் சட்டம் இயற்றுவதற்குப் பரிசீலிக்க வேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக் கொண்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோல சட்டம் இயற்றப்பட் டால், மத்திய அரசின் சட்டம், மறுபடி குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்குத் திருப்பி அனுப்பப் படும் என்பது சட்டத்தில் இருக்கக் கூடிய அம்சமாகும். ஒருவேளை மத்திய அரசு சட்டத்துக்கு எதிராக  மாநில அரசு ஒரு சட்டத்திற்கு குடி யரசுத் தலைவர் அனுமதி கொடுத்து விட்டால், மத்திய அரசின் சட்டத்தை அந்தந்த மாநிலங்களில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. மாநில அரசின் சட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment