பூரி ஜெகந்நாதர் கோயில் ஊழியர்கள் 404  பேருக்கு  கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

பூரி ஜெகந்நாதர் கோயில் ஊழியர்கள் 404  பேருக்கு  கரோனா


புவனேஸ்வர், செப்.30 பூரி ஜெகந்நாதர் கோயில் ஊழியர்கள் 404 பேருக்கு கரோனா - கோயிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயிலில் பணியாற்றும் 404 பேருக்கு கரோனா தொற்று இருப்பதால் கோயிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள ஒடிசா அரசு, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலின் கருவறையில் போதுமான இடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.


பக்தர்களுக்காக கோயில் திறக்க அனு மதிக்கப்பட்டால் தொற்று பரவ  வாய்ப் புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் கோயில் ஊழியர்கள் 351 பேருக்கும், 51 அதிகாரிகளுக்கும் பெருந் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment