‘‘மெட்ரோ ரயிலில் ஹிந்தியை நீக்குங்கள்; நீக்க முடியவில்லையென்றால் 22 மொழிகளையும் சேருங்கள்...!'' பெங்களூரு மெட்ரோவுக்கு அதிரடி உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 30, 2020

‘‘மெட்ரோ ரயிலில் ஹிந்தியை நீக்குங்கள்; நீக்க முடியவில்லையென்றால் 22 மொழிகளையும் சேருங்கள்...!'' பெங்களூரு மெட்ரோவுக்கு அதிரடி உத்தரவு

பெங்களூரு, ஆக.30 ‘‘மெட்ரோ ரயில் நிலையங் களில் எழுதியிருக்கின்ற ஹிந்தியை மொத்தமாக நீக்க வேண்டும்'' என்று பெங்களூரு மெட்ரோ ரயில்வே நிருவாகத்திற்கு  உத்தரவிடப்பட்டுள் ளது. ‘‘ஒன்று ஹிந்தியை நீக்குங்கள், இல்லை யென்றால், 22 மொழிகளையும் எழுதி வையுங் கள்'' என்று கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது


கருநாடகாவில், தாய்மொழியான கன்னடத் தைப் பலப்படுத்தவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற் கொண்டு வருகிறது.. அதில் ஒன்றுதான் கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் என்பது!


யாரெல்லாம் கன்னட மொழி பேசாத ஊழி யர்கள் இருக்கிறீர்களோ, அவர்கள் 6 மாதத்துக் குள் கன்னட மொழியைக் கற்க வேண்டும், இல்லாவிட்டால் டிஸ்மிஸ்தான் என்று வங்கி களில் பணிபுரிபவர்களுக்கு உத்தரவு ஒன்றுகூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்


பட்டது.


கன்னட மொழி


இது சம்பந்தமாக முன்னாள் முதல்வர் சித் தராமையா பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறார். மேலும் முன்பை விட அண்மைக் காலமாக கன்னட மொழி மேம் பாட்டு ஆணையம் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென் மாநிலங்களில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கொந்தளிப்பும், எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், ஹிந்தி மொழியை மொத்தமாக தூக்குங்கள் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மெட்ரோ


பெங்களூரு மெட்ரோவில் கன்னட மொழிப் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், கன்னட மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய தாவது:


‘மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் ஹிந்தி மொழியைப் பயன்படுத்தியது தொடர்பாக எங்களுக்கு நிறைய புகார்கள் வந்திருக்கின்றன. கடந்த 2017 இல் கன்னட ஆர் வலர்கள் போராட்டம் நடத்தி எத்தனையோ, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்த போர்டுகளில் ஹிந்தி வார்த்தைகளை கருப்பு மை கொண்டு மறைத்தனர்.


போர்டுகள்


இனி இந்த மாதிரி சம்பவம் நடக்காமல், பார்த்துக் கொள்ளவேண்டும்.  இப்போதைக்கு எமர்ஜென்சி போர்டுகள், அறிவிப்புகள் ஆகிய வற்றில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது.. எனவே, அந்த ஹிந்தி மொழியையும் முழுவது மாக நீக்கிடுங்கள். இல்லை என்றால், 22 மொழி களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறி யுள்ளார். இந்தியாவில் 22 அதிகாரப்பூர்வ அலு வல் மொழிகள் உள்ளன. ஆனால், இல்லாத தேசிய மொழியான இந்தியை மட்டுமே மத்திய அரசு உயர்த்திப் பிடிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.


ஹிந்தி மொழி


இதுபற்றி கன்னட மொழி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் டிஎஸ் நாகபரணா கூறும்போது,


‘‘மெட்ரோ ரயில் நிலைய போர்டுகளில் ஹிந்தி மொழியை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் நீக்கிவிட்டது.. ஆனால், மெட்ரோ ட்ரெய்ன்களிலும், ரயில்வே நிலையங்களிலும் எமர்ஜென்சி அறிவிப்புகள், தகவல்கள் இன்ன மும் ஹிந்தி மொழியில்தான் இருக்கின்றன. அதாவது கன்னடம், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் உள்ளது. இதில் ஹிந்தியை மட்டும் எடுக்கச் சொல்லியுள்ளோம்.


22 மொழிகள்


தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவிலும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.. அங்கும் ஹிந்தியை நீக்குங்கள்.  இல்லையென்றால், 22 மொழிகளையும் அதுகூட சேர்த்து கொள் ளுங்கள் என்று சொல்லி உள்ளோம். ஹிந்திக்கு இடம் கொடுப்பதாக இருந்தால், நம் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மொழிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும்.


மேற்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏரா ளமான சகோதரர்களும் இங்கே வசிக்கிறார்கள். அவர்களின் மொழிக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கலாமே?'' என்றார்.


கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் ஹிந்தி விவகாரத்தை கையில் எடுத்திருப்பதால், இது சம்பந்தமாக வரும் நவம்பரில் அறிக்கை அளிக்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக பதில் தரப்பட்டுள்ளது.


கருநாடகத்தில் கிளம்பியுள்ள இந்தப் பொறி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் பற்றிப் படருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


No comments:

Post a Comment