கொந்தகையில் தொல்லியல்துறை அகழ்வாய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 8, 2020

கொந்தகையில் தொல்லியல்துறை அகழ்வாய்வு

திருப்புவனம்,ஜூலை8, சிவகங்கை மாவட் டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் 6ஆம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.


இந்த நிலையில் கொந்தகையில் நேற்று நடந்த அகழாய்வு பணியில் குழந்தையின் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், தொல் லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி யாளர்கள் எலும்புக்கூட்டினை சேதாரம் இல்லாமல் முழுமையாக தோண்டி எடுத்து சுத்தம் செய்தனர். அதன் அளவை கணக் கிடும்போது 95 செ.மீ. உயர குழந்தையின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது. இதன் தலை பகுதி மட்டும் 20 செ.மீ. இருக் கும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த குழந்தையின் எலும்புக் கூடு கிடைத்த இடத்தின் அருகே கடந்த மாதம் 75 செ.மீ. உயரம் உள்ள குழந்தையின் எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த எலும்புக் கூடுகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக் கப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்


No comments:

Post a Comment