சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன விவகாரம்: மாநில அரசுக்கு உள்ள உரிமையை - அதிகாரத்தைப் பறிகொடுத்து- கலை, அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 30, 2020

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன விவகாரம்: மாநில அரசுக்கு உள்ள உரிமையை - அதிகாரத்தைப் பறிகொடுத்து- கலை, அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்  எச்சரிக்கை



சென்னை, ஜூலை 30- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலை வர் தளபதிமு.க.ஸ்டாலின் விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,


வரலாற்றுச் சிறப்புமிக்க சென் னைப் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தர் நியமனம் செய்வதில் “வெளிப் படைத்தன்மைக்கு” மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு - துணைவேந்தர் தேர்வு நடைபெற்று வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.


இப்பதவிக்கு “தேர்வுக்குழு” (Se arch Panel) அமைப்பதிலேயே மாண வர்கள் நலனில் அக்கறையே இல்லாத - பொறியியல் கல்வி பின்புலம் உள்ள டில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தலைவராக நிய மித்து - தமிழ்நாட்டில் உள்ள கல்வியா ளர்கள் எல்லாம் அவமரியாதைக்கும் -அவமதிப்பிற்கும் உள்ளாக்கப்பட் டார்கள். அதன்பிறகு இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ள 177 பேரில் உத் தரப்பிரதேசம், டில்லி, குஜராத், மகா ராட்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங் களில் இருந்து மட்டும் 30 பேர் விண்ணப்பித்துள்ளதும் - தற்போது அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 12 பேரை மட்டும் இறுதிக்கட்ட நேர் காணலுக்கு அழைத்து - அந்த நேர் காணலையும் கூட காணொலிக் காட்சி மூலம் நேற்று நடத்தியிருப்ப தாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.


கலை மற்றும் அறிவியல் கல்லூ ரிகளின் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பொறுப்பில் டில்லி ஜவகர் லால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய துணைவேந்தரை நியமித்தது முதல் கோணல்!


177 பேரில் எப்படி 12 பேரை மட் டும் நேர்காணலுக்கு அழைத்தார்கள் என்பது அடுத்தகட்ட இருட்டடிப்பு அப்படி அழைக்கப்பட்டவர் களிடம் காணொலிக் காட்சி மூலம் “கோவிட் -19” நெருக்கடியிலும் இப்போது நேர்காணல் நடத்தியிருக்கிறார் தேர் வுக் குழுத்தலைவர் என்பது, துவக்கத்திலிருந்து இறுதிவரை ஒட்டுமொத்த மாக “மர்மமான” நடைமுறை மூல மாகவே துணைவேந்தர் தேர்வு நடைபெறுவதைக் காட்டுகிறது.


“வெளிப்படைத்தன்மை” இது வரை நடைபெற்றுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் திட்டமிட்டு “விடைகொடுக்கப்பட்டு” 163 ஆண்டு புகழ்பெற்ற சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க-அ.தி.மு.க.அரசும்-வேந்தரும் இணைந்து செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியது.


ஆகவே, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அ.தி. மு.க. அரசும், வேந்தர் பொறுப்பில் உள்ள மாண்புமிகு தமிழக ஆளுநரும் வெளிப்படைத்தன்மையை நிலை நாட்டும் விதத்தில் - விண்ணப்பித்த வர்களில் 12 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டது எதனடிப்படை யில்? அவர்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டிய லின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் கள் எத்தனை பேர்? என்பதை அறி விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுடன் - பாரம்பரியப் பெருமையுடன் நீண்ட நெடிய காலமாக பின்னிப் பிணைந் துள்ள ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகம். அதனால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு - விண் ணப்பித் தவர்களில் தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வியாளர் ஒருவரையே துணை வேந்தராக நியமிக்க வேண் டும் என்றும் - அதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


“வேந்தர்தான் நியமிக்கிறார். எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் அமைதி காத்தது போல் - சென்னைப் பல்கலைக்கழகத் திலும் அமைதிகாத்து - மாநில அர சுக்கு உள்ள உரிமையை - அதிகாரத் தைப் பறிகொடுத்து - கலை மற்றும் அறிவியல் கல்வியைக் காவிமயமாக் கும் முயற்சிக்கு நிச்சயம் அனுமதித் திடக் கூடாது என்று எச்சரிக்கை செய்திட விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment