தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு மத நிகழ்ச்சிகளுக்குத் தடை தொடரும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 30, 2020

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு மத நிகழ்ச்சிகளுக்குத் தடை தொடரும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடில்லி,ஜூலை 30-  நாடு முழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு தளர்வு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தொட ரும் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.


தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத் தின் கீழ் 3ஆம் கட்ட ஊரடங்குத் தளர்வு குறித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, ஜூலை 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 3ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கரோனா தொற்று அதிகமுள்ள கட்டுப் பாட்டுப் பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். கரோனா தொற்று குறைவான பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப் படுகிறது. தொற்றுக் குறைவான பகுதிகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிறுவனங்கள் செயல்படலாம். சமூக இடைவெளியுடன் போதிய தற்காப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண் டாடப்படும். திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும். அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.


பொழுது போக்கு பூங்காக்கள், மது பானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது.


பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இயங்காது. திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ் வுகள் ஆகியவைகளுக்கும் விதிக்கப்பட் டுள்ள தடை தொடர்ந்து அமல்படுத்தப் படும். உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைந்த அளவில் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பு பவர்களுக்காக மட்டும் வெளிநாட்டு விமானங்கள் இயக்க அனுமதி வழங்கப் படுகிறது. இதைத் தவிர ஆங்காங்கே உள்ள நிலவரம் குறித்து கட்டுப்பாடுகள், தளர்வு கள் குறித்த முடிவுகளை மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.


கரோனாவைக் கட்டுப்படுத்த ஏற் கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். அதனைத் தொடர்ந்து பின் பற்ற வேண்டும்.


65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வய திற்குட்பட்ட குழந்தைகள்,  வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் தேவையற்ற பயணம் மேற்கொள் ளக்கூடாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையான நடவடிக் கைகள் எடுக்கப்படும்.


இவ்வாறு மத்திய உள்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment