காவல்துறையினரின் தாக்குதல்களால் ஒரே வாரத்தில் நான்காவது மரணம்: திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

காவல்துறையினரின் தாக்குதல்களால் ஒரே வாரத்தில் நான்காவது மரணம்: திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் கண்டனம்


சென்னை, ஜூன் 29- தமிழக எதிர்க் கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ள விவரங்கள் வருமாறு,


டுவிட்டர் பதிவில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது,


“பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் வழக்கை முதலமைச்சர் சிபிஅய் விசா ரணைக்கு மாற்றியுள்ளார். நீதி வழங் கும் அரசியல் துணிவும், முதுகெலும் பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர் பறித்த காவல்துறையினர் இப்போ தும் சுதந்திரமாக உலவ முடியுமா?


பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் வழக்கை தமிழக முதல்வர் சிபிஅய் விசாரணைக்கு மாற்றியுள்ளார்.


நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்தி ருப்பின் உயிர்பறித்த காவல்துறையி னர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?


இரு அப்பாவிகளின் உயிர் பறிக் கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று அய்.பி.சி. 302-இன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினரை உடனே கைது செய்ய வேண்டும்”.


தென்காசி வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் காவல்துறையினர் நடத்திய தாக்குத லால் மரணமடைந்ததாக கூறப்படு கிறது.


ஒரே வாரத்தில் நான்காவது மரணம்!


நாட்டை காவல்துறை கையில் கொடுத்துவிட்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ள தாவது,


மு.க.ஸ்டாலின் அரசியல் அறிக் கைகளை மட்டுமே வெளியிடுகிறார் என்றும், இந்த அரசுக்கு ஆக்கபூர் வமான ஆலோசனைகளாக என்ன சொல்லியிருக்கிறார் என்றும் முதல மைச்சர் பழனிசாமி கேட்டுள்ளார்.


அவருக்கு இதற்கு மேல் என்ன ஆலோசனைகள் சொல்வது என்று எனக்கே தெரியவில்லை. அந்தளவுக்கு ஆலோசனைகளை மார்ச் மாதம் 16ஆம் தேதியில் இருந்து சொல்லி வருகிறேன். இதுவரைக்கும் 50-க்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெளியிட் டுள்ளேன். இவை அனைத்தும் மக் கள் மன்றத்தில் உள்ளது. அதனை மீண்டும் முழுமையாகப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளும் திறன் இருக்குமானால், புரிந்து செயல்படுத் துங்கள் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.


இதுவரை நான் விடுத்த ஒரு சில ஆலோசனைகளைத் தவிர, பெரும் பாலான மற்றவற்றைக் கேட்காத நிலையில் கரோனா பரவல் அதி கமாகி வருகிறது. இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, 'ஸ்டா லின் என்ன ஆலோசனை சொன் னார்?' என்று பிரச்சினையைத் திசை திருப்பி வருகிறார் பழனிசாமி. நான் சொன்ன ஆலோசனைகள் மக்களுக் குத் தெரியும். முதல்வருக்கு இதுவரை தெரியவில்லை என்றால் இனிமே லாவது தெரிந்து கொள்ளுங்கள்.


பரிசோதனைகளை அதிகப்படுத் துங்கள்.


தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுங்கள்.


தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.


வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக் களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங் கள். மக்களைக் காக்கும் மருத்துவர் களையும், செவிலியர்களையும் அரசு காக்க வேண்டும்.


பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிடுங்கள்.


மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விளக்கம் அளியுங்கள்.


பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் இருக்கும் நோயாளிக ளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுங்கள்.


சித்த மருத்துவ மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேளுங்கள்.


கேரளா எப்படி மீள்கிறது; தாராவி எப்படிக் காக்கப்படுகிறது என்பதை தெரிந்தறியுங்கள்.


- இவை அனைத்தும் நான் ஏற்கனவே சொன்னவை.


மீண்டும் சொல்கிறேன்; மீண்டும் மீண்டும் சொல்வேன்; சொல்லிக் கொண்டே இருப்பேன்; மக்கள் காக் கப்படும்வரை!


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment