34 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

34 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிப்பட்டி, ஜூன் 29- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்கு கிறது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.


71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 34.88 அடியாக குறைந்து விட்டது. அணையில் இருந்து மதுரை மாவட்டம் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், தேனி கூட்டுக் குடிநீர் திட்டம், பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத் துக்கு மட்டும் வினாடிக்கு 72 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


ஏற்கெனவே வைகை அணையில் 20 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளது. இத னால் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு வைக்க முடியும் நிலை உள்ளது. இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட தென்மேற்குப் பருவமழையும் பொய்த்து விட்டது.


வைகை அணைக்கு இக்கட்டான நிலை யில் கைகொடுக்கக்கூடிய, முல்லைப் பெரியாறு அணையிலும் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. இதனால் அங்கிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. நீர்வரத்தே இல்லாத சூழலில் வைகை அணை நீர் மட்டம் கடந்த சில வாரங்களாக வேகமா கக் குறைந்து வருகிறது.


No comments:

Post a Comment