நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 31, 2020

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்



புதுடில்லி, மே 31  கரோனாவை கட்டுப்படுத்து வதற்காக தொடர்ந்து 4- ஆவது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (31.5.2020) முடிவடைய இருந்தது.


இதற்கிடையே கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட் டிக்கப்படுமா? மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த வியா ழக்கிழமை மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று முன்தினம் பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண் டார்.


கட்டுப்பாடுகள் தளர்வு


இந்த நிலையில், ஜூன் மாதம் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (30.5.2020) அறிவித்தது. அதேசமயம் பல கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.


இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழி காட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-


நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும். அங்கு எந்த தளர்வும் இன்றி நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அத்தி யாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனு மதிக்கப்படும்.


கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லையை உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகம் வரையறுக்க வேண்டும்.


கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியா வசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதிக் கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், அவரச மருத்துவ தேவைகள் தவிர அந்த பகுதிகளில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, அந்த பகுதிக்குள் வரவோ கூடாது.


கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய்த் தொற்றை கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டும்.


நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே மற்ற பகுதிகளில் மேலும் கட் டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அங்கு அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், சில கட்டுப்பாடுகள் தொடரும்.


கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே, நோய்த்தொற்று அதிகம் ஏற்பட வாய்ப் புள்ள பகுதிகளை மாநில, யூனியன் பிர தேச அரசுகள் கண்டறிந்து, அங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.


முதல் கட்ட தளர்வாக 8- ஆம் தேதி முதல் வழிபாட்டு இடங்கள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறக்க அனுமதிக்கப் படுகிறது. விருந்தோம்பல் சேவைகளை தொடங்கலாம்.


மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து....


அடுத்ததாக மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்து ஆலோ சித்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படும்.


கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களு டன் மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும். அவர்கள் தெரிவிக்கும் கருத்து களின் அடிப்படையில் ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும்.


சூழ்நிலைகளை பொறுத்து பன்னாட்டு விமான சேவை, மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்படும்.


 சூழ்நிலைகளை பொறுத்து சினிமா திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங் காக்கள், மதுபான பார்கள், கலையரங் கங்கள் திறக்கப்படும்.


இதேபோல் சூழ்நிலைகளை பொறுத்தே  சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாசார, மத விழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி வழங் கப்படும்.


அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை யாரும் வெளியே வரக்கூடாது. இதற்கான தடை உத்தரவை உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும்.


இ-பாஸ் தேவையில்லை!


மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங் களுக்கு இடையேயும் மனிதர்கள் சென்று வரவும், சரக்குகளை கொண்டு செல்லவும் தடை இல்லை. இதற்கு தனியாக அனுமதி அல்லது இணையதள பாஸ் (இ பாஸ்) போன்ற எதுவும் தேவை இல்லை. என்றாலும் இதை அரசுகள் ஒழுங்குபடுத்த வேண்டும்.


அண்டை நாடுகளுக்கான சரக்கு போக் குவரத்தை மாநிலங்கள் தடுக்கக் கூடாது.


வழிகாட்டு நெறிமுறைகளுடன் பயணி கள் ரயில்கள், புலம் பெயர்ந்த தொழி லாளர்களுக்கான சராமிக் சிறப்பு ரெயில்கள் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர் களை அழைத்து வருவது தொடர்ந்து நடைபெறும்.


அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகள் தவிர 65 வயதுக்கு மேற்பட்ட வர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட் பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.


பொது இடங்களிலும், வழிபாட்டு இடங்களிலும், பயணத்தின் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.


பொது இடங்களில் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.


கடைகளில் ஒரே சமயத்தில் 5 நபர் களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.


திருமண விழாவில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேலும் கூடக்கூடாது.


 உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment