ஏனிந்த இரட்டை வேடம் - இரட்டை நாக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 28, 2020

ஏனிந்த இரட்டை வேடம் - இரட்டை நாக்கு!

ஒருபக்கம் இஸ்லாமிய வெறுப்புக் கூடாது - மறுபக்கம் இஸ்லாமியர்களுக்கு எதிராக வழக்கு - ஏனிந்த இரட்டை வேடம் - இரட்டை நாக்கு!


இந்தியா - ஹிந்து நாடல்ல - மதச்சார்பற்ற நாடு


சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!


தீர்ப்பினை வரவேற்று - பாராட்டி தமிழர் தலைவர்  ஆசிரியர்  அறிக்கை



ஹிந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது - இந்தியா ஓர் இந்து நாடல்ல என்றும், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றும் திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினை வரவேற்று, பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


அண்மைக் காலத்தில் வேடிக்கையான நாடகம் ஒன்று நம் நாட்டில் அரங்கேறி நடந்துகொண்டுள்ளது.


வெளிநாடுகளின் ஏடுகள் முதல்,


அரசர் குடும்பங்கள் வரை


பலரும் கண்டனம்


திடீரென்று ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி, பா.ஜ.க. போன்ற அமைப்புகளுக்கு இஸ்லாமியர்களான சிறுபான்மையினர்மீது பரிவும், பாசமும் பொத்துக் கொண்டு, பீறிட்டு அடிப்பதைப் போன்ற நாடகக் காட்சிகள் - பழைய கால நாடகங்களில் வரும் திடீர் ‘‘டர்னிங் சீன்களைப் போல'' - நடந்து வருவதன்பற்றிய பின்னணி - முக்கிய காரணம் கவனிக்கத்தக்கது. இங் குள்ள அந்த அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தேவை யின்றி சிறுபான்மைச் சமுதாய மக்களான இஸ்லாமி யர்கள்மீது- கரோனா தொற்று நோயை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி - டில்லியில் தப்ளிக் அமைப்பினர் நடத்திய மாநாடு - அதன் பிறகு அதில் கலந்து கொண்டோரால் நாடெங்கும் அதிகமாக பரவியது கரோனா என்ற ஒரு பிரச்சாரம், அதன் காரணமாக சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள்மீது வெறுப்பு நடவடிக்கைகளை ஏவுதல் முதல் வெளிநாடான அய்க்கிய அரபு நாட்டில் பரவிய கரோனாவையும் வைத்து,  ஒரு வெறுப்புப் பிரச்சார அலையை உருவாக்கி, சமூக வலை தளங்களில் பரவ விட்டதற்கு, அந்த நாடுகளின் ஏடுகள் முதல், அரசர் குடும்பங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்தன. இதனால் இந்தியாவுடன் தாம் கொண்டுள்ள நல்லுறவுக்குக் கேடு ஏற்படக் கூடும் என்பதாக பதிவிட்டதன் விளைவு -  நமது பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் முதல்


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரை பலரும் இதனைச் சமாளிக்க விளக்கங்கள் கொடுப்ப தோடு, இஸ்லாமியர்களை வேற்றுமைபடுத்திக் காட்டக் கூடாது என்பது போன்ற ஒரு புதிய நிலைப்பாடு - பிரச்சாரத்தில் ஈடுபட்டு, விநோதமான விளைவை உருவாக்கி, வெளிநாட் டிலும், உலகத் திலும் ஏற்பட்ட சரிவைத் தடுத்து நிறுத்த முயல்கின்றனர். (Damage Control Exercise).


சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!


இந்த நிலைப்பாடு இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் உள்ள ஹிந்து முன்னணி என்ற அமைப்பினர், தமிழ்நாடு அரசு ஏழை இஸ்லாமி யர்களுக்கு நோன்புக் கஞ்சிக்காக 5,460 டன் பச்சரிசியை வழங்கக்கூடாது என்று - அதன் செயலாளர் குற்றாலநாதன் என்பவர் மூலம் பொதுநல வழக்கு ஒன்றை (PIL)  உயர்நீதி மன்றத்தில் போட்டுள்ளனர்.


இந்தப்படி ஆண்டுதோறும் அவர்களது விழா விற்கு ஏழை, எளியவர்களுக்கு உதவியாக முதல மைச்சராக ஜெயலலிதா அவர்கள் இருந்த காலத்திலே இருந்து சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. அப்போதெல்லாம் வாய்மூடி மவுனியாக இருந்தவர்கள் இப்போது இப்படி ஒரு வல்லடி வழக்குப் போடுவது ஏன் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.


வெளிநாடுகளில் உள்ளவர்களுக்குத் தெரியும் வகையில், இஸ்லாமிய வெறுப்புக் கூடாது என்று ஒருபுறத்தில் பிரச்சாரம் - இன்னொரு களத்தில் (தமிழ்நாடு) இப்படிப்பட்ட ஒரு வழக்கு என்றால், இது அசல் இரட்டை வேடம் அல்லவா?


இவர்களை - இவர்கள் இரட்டை நாக்கு - இரட்டைப் போக்குப் பேர்வழிகள் - எப்படிப்பட்ட சூழ்ச்சியாளர்கள் என்பதை இந்த வழக்கின்மூலம் உலகம் நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது உறுதி.


வேற்றுமையில் ஒற்றுமை காணும் கலாச்சாரம் உள்ள நாட்டில் மதச்சார்பின்மைதான் முக்கியம்!


இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, ஹிந்து முன்னணி பதிவு செய்யப்பட்ட அமைப்பா? என்று கேட்ட கேள்விக்கு, வாதாடிய வழக்குரைஞர் சரியான பதிலை அளிக்க முடியாத நிலையில், தனி நபர் வழக்காக வாதாடப்பட்டது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை என்ற அடிப்படைக் கோட்பாட்டிற்கு முரணானது என்று கூறி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் கலாச்சாரம் உள்ள நாட்டில் மதச்சார்பின்மைதான் முக்கியமானது - நாட்டை ஒன்றுபடுத்தும் தத்துவக் கோட்பாடு - பாதுகாப்பு என்பதை ‘‘பிரபுல்லா கொராடியா  க்ஷிs இந்திய யூனியன்'' என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய வழக்கொன்றின் (2011) தீர்ப்பை அடிப் படையாகக் கொண்டு, (அத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் - ஜஸ்டிஸ் மார்க்கண்டேய கட்ஜூ, ஜஸ்டிஸ் கியான் சுதா மிஸ்ரா ஆகிய இருவர்). சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்புக் கூறியுள்ளது.


ஹிந்து முன்னணியினரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது!


அத்தீர்ப்பில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; அது ஒரு ஹிந்து நாடு அல்லவென்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியதோடு, 1947 நாடு பிரிவினையின்போது அதனால்தான் நம் நாடு பல சோதனைகளையும் கூட நிதானத்துடன் தீர்க்க முடிந்தது என்று குறிப்பிட்டு, இலவசமாக இஸ்லாமி யர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்கக் கூடாது என்ற ஹிந்து முன்னணியின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று இந்தக் கோரிக்கையைத் தள்ளுபடி செய்துள்ளனர்.


(ஆங்கில ‘இந்து' நாளேடு 28.4.2020, பக்கம் 4 இல் வெளியிட்டுள்ள செய்தியைக் காண்க).


இத்தீர்ப்பை வரவேற்றுப் பாராட்டுகிறோம்!


ஹிந்து முன்னணி வகையறாக்களின் இத்தகைய ‘‘வித்தைகளைப் புரிந்து'' - சரியான பார்வையோடு தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் - பெருமக்களின் இந்தத் தீர்ப்பு ஒரு கலங்கரை வெளிச்சமே!


இதை வரவேற்றுப் பாராட்டுகிறோம்!


கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்


சென்னை-28.4.2020


No comments:

Post a Comment