மோடியின் 69 மணி நேர மவுனத்துக்கு நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 29, 2020

மோடியின் 69 மணி நேர மவுனத்துக்கு நன்றி


கபில்சிபல் காட்டம்


புதுடில்லி. பிப். 29 தலைநகரில் நடைபெற்ற வன்முறை குறித்து அறிந்துகொள்ள  மோடிக்கு 69 மணி நேரம் தேவைப்பட்டு உள்ளது... அதற்கு நன்றி  என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கிண்டலடித்துள்ளார்.


மத்திய அரசு அமல்படுத்தி உள்ள சிஏஏக்கு எதிராக தலைநகர் டில்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அங் குள்ள  ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நீடித்து வரு கிறது. இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வடகிழக்கு டில்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த் பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில், சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப் பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.


இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு களை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த வன்முறை மேலும் 3 நாள்கள் நீடித்த நிலையில், சுமார்   150- க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர் களில் காவல்துறை அதிகாரி கள் உள்பட இதுவரை 39 பேர் மரணமடைந்துள்ளனர்.


கலவரத்தை உரிய நேரத் தில் கட்டுப்படுத்த மத்திய, மத்திய அரசு தவறி விட்ட தாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும்  காங்கிரஸ் உள்பட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.


இதுகுறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் மோடிக்கு கேள்வி விடுத்துள் ளார். ‘டில்லியில் வன்முறை நடைபெற்ற சமயங்களில் நரேந்திர மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா?, கலவரம் நடந்த 69 மணிநேரம் கழித்து விழித்துக் கொண்டு, மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். விரைவான பதிலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று நக்கலாக கூறினார்.


நாட்டின் பிரதமரான அவர், இதை  முன்கூட்டியே செய்திருக்க வேண்டாமா? என கேள்வி விடுத்தவர், டில்லி காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, மக்கள் அமைதி காக்க வேண் டும் என்று வேண்டுகோள் கூட விடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.


டில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  உள்துறை அமைச்சர் அமித் ஷா  வந்து பார்வையிட வேண்டும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்றும் கபில் சிபல் வலியுறுத்தினார். இது குறித்து கபில்சிபல் பதிவிட்டுள்ள சுட்டுரையில்,


‘‘69 மணிநேர  மவுனத்திற் குப் பிறகு எங்கள் சகோதர, சகோதரிகளிடம் முறையிட்ட மைக்கு நன்றி மோடிஜி. இதற் கிடையில்: 38 பேர் இறந்தனர்,  இன்னும் எண்ணிக் கொண்டி ருக்கிறார்கள், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த னர், ஆயிரக்கணக்கான வடுக் கள் பண்புகள் அழிக்கப்பட் டன, எங்கள் முதல்வரைப் பொறுத்தவரை அவர் ஜெயித் தார்! உங்கள் அமைச்சர் காங் கிரஸை குற்றம் சாட்டுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment