தேர்தல் பத்திர ஊழலை மறைக்க கச்சத் தீவு பிரச்சினையா? உண்மையில் நடந்தது என்ன? - கவிஞர் கலி.பூங்குன்றன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 9, 2024

தேர்தல் பத்திர ஊழலை மறைக்க கச்சத் தீவு பிரச்சினையா? உண்மையில் நடந்தது என்ன? - கவிஞர் கலி.பூங்குன்றன்

featured image

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

திராவிடர் கழக மாநாடும் – தீர்மானமும்
26.7.1997 அன்று இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில்
தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு – கச்சத்தீவு மீட்புரிமை மாநாடு நடத்தப்பட்டது

மோடி அரசின் மிகவும் மோசமான துரோக அணுகுமுறை

முக்கியமாக மோடி அரசு வந்த பிறகு ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் ஒன்றிய அமைச்சர்களான சுஸ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி போன்றோர் தமிழ்நாட்டு மீன்வர்களை மிக மோசமான எல்லை தாண்டிய கள்ளத் தொழிலாளர் களாகவே சித்தரித்து வந்திருக்கிறார்கள். 2015-ஆம் ஆண்டு மார்ச் முதலாம் தேதியன்று இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுஸ்மா சுவராஜ் மீனவர் தாக்குதல்தொடர்பாக பேசும் போது ஒரு நாடு அதன் நாட்டு எல்லையைப் பாதுகாக்க முழு உரிமையும் உள்ளது என்று கூறிவிட்டு வந்தார் – சுஸ்மா சுவராஜின் இந்த பேச்சிற்கு சில தமிழ்நாடு பாஜகவினர் “நாம் எப்படி பாகிஸ்தானிடமிருந்து நமது எல்லையைப் பாதுகாக்கிறோம் என்பதைத்தான் சுஸ்மா அங்கே கூறினார்” என்று சமாளித்தனர். சுஸ்மா சுவராஜ் பேசிவிட்டு வந்த அடுத்த நாளே இந்திய கடற் படை அதிகாரி ஒருவர் இப்படிக் கூறினார், “எல்லை தாண்டும் மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதிக பொருளுக்கு ஆசைப்படுகிற மீனவர்கள் இப்படி எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்கள்” என்கிற தொனியில் சொன்னார்
மேலே சுட்டிக்காட்டியுள்ள இந்திய ஆளும் வர்க்க அதிகார பீடங்களின் குரல்களில் எங்காவது இலங்கை அரசை இது தொடர்பாக கண்டித்திருக்கிறார்களா? பாதிக்கப்படுகிற மீனவர்களை அதிக ஆசை கொண்ட வர்களாகவும், எல்லை தாண்டும் கள்ளக் குடியேறிகளா கவும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சித்தரிக்கிறார்கள்.
கலைஞர் எதிர்க்கவில்லையா?

கச்சத் தீவு குறித்த ஒப்பந்தம் 28-6-1974 அன்று கையெழுத் தான உடனேயே, அதற்கு அடுத்த நாளே 29-6-1974 அன்று சென்னை தலைமைச் செயலகத் தில் தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் கச்சத் தீவு பற்றித் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

அதே 29-6-1974 அன்று தலைவர் கலைஞர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “Dear Prime Minister, On behalf of the Government of Tamil Nadu and on behalf of the people of Tamil Nadu, I am constrained to express our deep sense of disappointment over the recent Indo-Sri Lanka Agreement, according to which, Sri Lanka’s claim to Kachativu has been conceded by the Government of India. May I express the hope that you will take into consideration the decision contained in the Resolution and take appropriate action?”
– என்று பிரதமருக்கு முதலமைச்சர் கலைஞர் கடிதம் எழுதினார்.

திமுகப் பொதுக்குழுவில் தீர்மானம்!

1974ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியில் இருந்த போதே, திமுக பொதுக்குழுவில், “இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுமான கச்சத்தீவின் மீது இலங்கைக்கு அர சுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை, திமுக பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிக்கு எதிராக இந்த ஒப்பந்தம் அமைந்து விடக் கூடாது என்று தி.மு.க. அரசு பல முறை ஆதாரங்களுடன் ஒன்றிய அரசை அணுகித் தடுத்தும் கூட, அதனை அலட்சியப்படுத்தி விட்டு, ஒன்றிய அரசு கச்சத் தீவை இலங்கைக்கு அளித்துள்ள செயல் வேதனை தருவ தாகும்” என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றியிருக் கிறது. தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்ல, 24.7.1974 அன்றே கச்சத்தீவுப் பிரச்சினைக்காக தமிழ்நாடு முழு வதும் கண்டனப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது – தஞ்சை மாவட்டத் தில் நடைபெற்ற கூட்டங்களிலே முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர் களே கலந்து கொள்ளவில்லையா?

1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் கச்சத் தீவை இலங் கைக்கு அளிக்கும் ஒப்பந்தம் நடந்தது. அப்பொழுது/ வெளியுறவுத்துறை அமைச்சராகவிருந்த சுவரண்சிங் இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமை, கடற் பயண உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ள தாகவும், கச்சத் தீவில் தமிழ்நாடு மீனவர்கள் ஓய்வெடுக் கவும், வலைகளை உலர்த்தவும், அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளவும் உரிமை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

1976இல் இரு நாடுகளின் செயலாளர்களுக்கிடையே நடந்த தகவல் பரிமாற்றத்தின்படி மீன்பிடி உரிமை பறிக் கப்பட்டது. இந்தக் கடிதங்கள் நாடாளுமன்ற ஒப்புத லையோ தமிழ்நாடு அரசின் ஒப்புதலையோ, பெற வில்லை. அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலமும், நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமுமே இந்தியாவின் எந்தப் பகுதியையும் பிற நாட்டுக்குக் கொடுக்க முடியும். எனவே கச்சத் தீவு ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற வேண்டும்” என்று டி.ஆர். பாலு அவர்கள் பேசியதைவிட வேறு என்ன தி.மு.க. தரப்பில் செய்திருக்க முடியும்?
ஜெயலலிதா நிலைப்பாடு என்ன?

கச்சத்தீவை உண்மையிலே மீட்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அஇஅதிமுக அரசுக்கு இருக்குமே யானால், இந்தப் பிரச்சினையில் அரசியல் லாபம் தேட முயற்சிக்காமல், லாவணிக் கச்சேரி நடத்த ஆசைப் படாமல் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரே குரலில் தமிழ்நாடு எழுந்து நிற்க ஆவன செய்யு மாறு வலியுறுத்துகிறோம். மற்ற மற்ற மாநிலங்களைப் பார்த்தாவது தமிழ்நாடு புத்தி கொள்முதல் பெற வேண்டாமா?

20.4.1992 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது கச்சத் தீவை மீட்க வேண்டு மென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி ஒன் றிய அரசுக்கு அனுப்பினோம் – ஆனால் கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய – நடை பெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை என்று கூறி னாரா? இல்லையா?

இன்னும் சொல்லப்போனால், 30-9-1994இல் தமிழ் நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் அவர்களுக்கு எழுதிய, “The Ceding of this tiny Island to the Island Nation had been done by the Government of India in the interest of better bilateral “relations” அதாவது “தீவு நாடான இலங்கைக்கு இந்தச் சின்னஞ்சிறிய தீவினை (கச்சத் தீவினை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற் காகத்தான்” என்று தெரிவித்தது உண்டா? இல்லையா?

மீண்டும் 23-7-2003 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா. அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நல்லுறவுப் பேணப்படவும் தமிழ்நாடு மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகள் காப்பாற்றப்படவும் உள்ள ஒரே வழி” என்று குறிப்பிட்டு மேலும் எழுதும்போது. The best possible solution is to get the island of Katcha Theevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katcha Theeve could be upheld at the same time’ “அதாவது கச்சத்தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும் வலைகளைக் காய வைப்பதற்கும் அந் தோணியார் திருவிழாவுக்குச் செல்வதற்கும் நிரந்தர குத்தகைக்குப் பெறலாம்: அதே நேரத்தில் கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்று அன்றைக்கு எழுதியவர்தான் முதலமைச்சர் ஜெயலலிதா.

பா.ஜ.க. ஆட்சியில் நடந்தது என்ன?

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கை பயணங்கள் அதிகமாயின, மோடி உலகம் முழுவதும் சுற்றும் போது சுஸ்மா சுவராஜ் அரசுப் பயணமாகவும் சொந்தப் பயணமாகவும் இலங்கைக்கும் பலமுறை சென்று வந்துவிட்டார். இந்த நிலையில் கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் ஒன்றை அமைத்து வந்தது. இது குறித்து தமிழ்நாடு அரசியல் கட்சிகள் வெளியுறவுத்துறைக்குப் புகார் அளித்த போது “கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவி லைப் புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது. கட்டு மானப் பொருட்களை இலங்கைக் கடற்படையினர் கொண்டுவந்து சேர்க்கின்றனர்” என்று தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசு அங்கு உள்ள பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அங்கு இலங்கைக் கடற்படை முகாம் இல்லை என்று அடித்துக் கூறி அறிக்கையும் விட்டது.
ஆனால், 2 இலங்கை கடற்படைக் கப்பல்கள் கச்சத்தீவில் நிரந்தரமாக நிறுத்தப் பட்டுள்ளன. மேலும் சுமார் 70க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் 13 அதி காரிகள் என ஒரு சிறிய கடற்படை முகாம் கச்சத்தீவில் உருவாகிவிட்டது. இதை இலங்கையைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று 3.6.2016 அன்று இரவு ஒளிபரப்பியது.

தலைவலி போய் திருகுவலியை வரவழைத்துக் கொண்டது. இந்திய அரசு. ஏற்கெனவே அமெரிக்கா வின் கடற்படையை திருகோணமலையில் நிறுவுவதற் கான ஏற்பாடுகள் ஒரு பக்கம்.
பட்டுப் புடவையை இரவல் கொடுத்த பெண் பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டவர் செல்லும் இடம் எல்லாம் பாயை எடுத்துக் கொண்டு அலைந்த கதையாகி விட்டது. ஒரு பக்கம் தமிழ்நாடு மீனவர்கள் அன்றாடம் தாக்கப்படும் கொடுமை! ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதையாகி விட்டது.
மோடி அரசின் ராஜ தந்திர அணுகுமுறைகள் இதில் செல்லுபடியாகட்டுமே பார்க்கலாம்.
இந்தியாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எப்பொழுதுமே இலங்கை அரசின் செல்லப் பிள்ளையாயிற்றே.

திமிரடியான பேச்சு!

மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்குக் கடலில் முப்படை பாதுகாப்புக் கோரி வழக்குரைஞர் எஸ்.எம். ஆனந்த முருகன் என்பவர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தபோது, இந்திய அரசின் சார்பில் இந்தியக் காவல் படையின் துணை இயக்குநர் ஜெனரல் கே.ஆர். நாட்டியாலின் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தது என்ன தெரியுமா? ‘இந்திய மீனவர்கள் தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்’ என்று சொல்ல வில்லையா? மேலும் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்லுவதால் இரு நாட்டு மீனவர் களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதற்கு இந்தியக் கடலோரக் காவல் படை பொறுப்பேற்க முடியாது’ என்று பொறுப்பைத் தட்டிக் கழித்தது என்றால், இன்றுள்ள ஒன்றிய பிஜேபி அரசிடம் தமிழ்நாட்டு மீனவர்கள் எதை எதிர்பார்க்க முடியும்?
அன்றாட வானிலை அறிக்கை போல தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்வது – விடுதலை செய்வது என்ற கண்ணாமூச்சி விளையாட்டுகள்தான் நாளும் நடந்து வருகின்றன. ரூ.18,000 கோடி வெளிநாட்டு செலாவணியையும் 40 சதவீத உணவு பிரச்சினை யையும் தீர்க்கும் உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாட்டாளி மக்கள் உயர் ஜாதி மக்கள் அல்லவே!

பிஜேபி ஆட்சியில் மீனாகுமாரி அறிக்கை என்ற ஒன்று வந்தது. துறைமுகங்களை எல்லாம் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்து விட்டு. மீன்பிடி தொழிலையும் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக் கும் திட்டத்திற்குக் கால்கோள் விழா நடத்தத் திட்ட மிடப்பட்டது.
ஒடிசாவில் இருதுறைமுகங்களும் மோடியின் குஜ ராத்தில் மிகப் பெரிய துறைமுகமும் அதானிக்குத் தாரை வார்க்கப்படவில்லையா?

உலக மீனவர் பேரவைக் கூட்டம்

உலக மீனவர் பேரவையின் ஒருங்கிணைப்புக் குழு புதுச்சேரியில் கூடியது. உலகம் முழுவதும் உள்ள மீன வர்களின் பிரச்சினை குறித்து அலசி ஆராயப்பட்டது. கரிபியன், கனடா, கென்யா, தெ.ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல உலக நாடுகள் கலந்து கொண்டன. தெற்காசியப் பகுதிகளில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டிய காரணத்துக்காக மீனவர்கள் கைது செய்யப்படுவதில் நிரந்தரமான தீர்வு தேவை! விடுதலை செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழிகள் எல்லாம் போதுமானவையல்ல; எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டா லும் கைது செய்வதில்லை என்று இந்தியா, பாகிஸ்தான் இலங்கை நாடுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
1984 முதல் இதுவரை எல்லை தாண்டி வந்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு கொடுக்கப் படாத காரணத்தால் மீனவர்களின் பிள்ளைகள் போதிய கல்விபெற முடியாத சூழ்திலையில் வறு மைக்கு ஆட்படுகின்றனர். அவர்களுக்குச் சம்பந்தப் பட்ட நாடுகளால் போதிய நட்ட ஈடு தரப்பட வேண்டும் என்று உலக மீனவர் பேரவையின் தலைவர் முகமது அலி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறினார் (19.7.2015).

ஒன்றிய அமைச்சருடன் சந்திப்பு

தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஒன்றிய அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம், மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கங்க ளின் பிரதிநிதிகள், டில்லியில் வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினர்.
நாடாளுமன்றத்தில் உள்ள, வெளியுறவுத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப் பின்போது, அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழ் நாடு பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும், உடன் இருந்தனர்.
அப்போது, ‘மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல், ஒன்றிய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான நிதியுதவி வழங்கப்படும்’ என்று உறுதியளித்ததாக, மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஆனால், விளைவு வெறும் பூஜ்ஜியம்தான்.
கே.பி. ராமலிங்கம் (தி.மு.க.):
“இலங்கை கடற்படையினர் செயல்பாடு குறித்து எஸ்.எம். கிருஷ்ணா வெளியுறவு அமைச்சராக இருந்த காலம் முதல் தற்போதைய சுஷ்மா சுவராஜ் வரை பழைய பதிலையே ஒன்றிய அரசு கூறி வருகிறது. இலங்கையுடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்வதிலேயே இந்தப் பிரச்சினையை ஒன்றிய அரசு அணுகுகிறது. எப்போது கேள்வி எழுப்பினாலும் தெளிவற்ற பதிலையே ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தில் தெரிவிக்கிறது. இது பற்றியே தனியாக மாநிலங்கள வையில் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளேன்!” (கே.பி.ராமலிங்கம் இப்போது பிஜேபியின் மாநிலத் துணைத் தலைவர் – சிரிக்காதீர்கள்)

கச்சத்தீவு பிரச்சினை
பிரதமர் மோடி பதில் சொல்லுவாரா?

30.10.2015 நாளிட்ட ‘தினமணி’ ஏட்டில் பழ.நெடுமாறன் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.
இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் சுமூகமாகப் பேசி விட்டு, திரும்பிய இரண்டே நாட்களில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே ‘இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களைச் சுடும் உரிமை தங்கள் கடற்படைக்கு உண்டு என எச்சரித்தார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை கடந்து மீன் பிடித்தால் ரூ.15 கோடி அபராதம் விதிப்பதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள இருப்பதாக இலங்கை அரசின் மீன் வளத்துறை தலைமை இயக்குநரான பெர்னாண்டோ எச்சரித்தார்.
இவை எல்லாம் மோடி பிரதமராக இருந்தபோது நடந்தவை தான்.
பழ.நெடுமாறன் அப்பொழுதே ‘தினமணி’ ஏட்டில் (30.10.2015) எழுதியதுதான்.
கச்சத்தீவுக்காகக் கண்ணீர் உகுக்கும் பிரதமர் மோடியும், அண்ணாமலைக் கூட்டமும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
தேர்தல் பத்திர ஊழலை மடைமாற்றம் செய்ய கச்சத்தீவு பிரச்சினையைக் கையில் எடுத்தால், அதற்குப் பதிலடி கொடுக்க கத்தை கத்தையான ஆதாரங்கள் உண்டு – எச்சரிக்கை.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில்
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதா?

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று சொல்லுவது அபாண்டமானது. 1974 ஜூலை 23ஆம் நாள் மக்களவையில் இது குறித்து திமுக பிரச்சினையை எழுப்பியது.
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்கு முன் ஒன்றிய அரசு எங்களோடு ஆலோ சனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளு மன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இலங்கையோடு நல்லுறவு வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். ஆனால் இந்த ஒப்பந்தம் நம் நாட்டின் ஒரு பகுதியை எந்த வரைமுறையுமின்றித் தாரை வார்த்துக் கொடுப்ப தாக இருக்கிறது. இது எந்த அரசும் செய்யக் கூடிய காரியமல்ல. எனவே வெளிநடப்பு செய்கிறோம் என்று திமுகவைச் சேர்ந்த இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர். பார்வேடு பிளாக் கைச் சேர்ந்த பி.கே.என்.தேவர், பெரியகுளம் முகம்மது ஷெரீப் (முஸ்லிம் லீக்), ஒடிசா பி.கே.தேவ் (சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி) ஆகியோரும் வெளிநடப்புச்செய் தனர். தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.மாரிசாமியும் வெளிநடப்பு செய்தார்.

No comments:

Post a Comment