பிஜேபியின் அடாவடித்தனம்: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பிஜேபி மாவட்ட தலைவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

பிஜேபியின் அடாவடித்தனம்: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பிஜேபி மாவட்ட தலைவர் கைது

மயிலாடுதுறை, மார்ச் 17- தருமபுரம் ஆதீனகர்த்தரை பணம் கேட்டு மிரட் டிய வழக்கில், பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரம் ஆதீனகர்த்தர் தொடர் பான வீடியோ, ஆடியோ இருப்பதாகக் கூறி, பணம் கேட்டு சிலர் மிரட்டுவதாக ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்.25ஆ-ம் தேதி புகார் அளித்தார்.

அதன்பேரில் 9 பேர் மீது காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து, தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, திருவெண்காடு சம்பாகட்ட ளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ், ஆடுதுறை வினோத், நெய்க்குப்பையைச் சேர்ந்த நிவாஸ் ஆகிய 4 பேரை பிப். 28ஆ-ம் தேதி கைது செய்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் க.அகோரம் உள்ளிட்ட 5 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில், மும்பையில் பதுங்கியிருந்த பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்தை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரை நேற்று (மார்ச் 16) மயிலடுதுறைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment