மத்திய பிரதேச அரசின் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

மத்திய பிரதேச அரசின் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து!

போபால், மார்ச் 9 மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமைச் செயலகமான வல்லப் பவன் உள்ளது.
இன்று (9-4-2024) காலை, தலைமைச் செயலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். தீப்பற்றி எரியும் கட்டடத்தில் இருந்து கரும் புகை வெளி யேறி அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
தீ விபத்து குறித்து ம.பி. முதலமைச்சர் மோகன் (யாதவ்), “ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக் கப்பட்டு வருகின்றன என தெரியவந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வண் ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment