இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 11, 2024

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி

featured image

சென்னை, மார்ச் 11- இலங்கையில் இருந்து தாயகம் திரும் பியவர்களி டம் அவர்களுக்கு வீடுகட்ட வழங் கப்பட்ட கடனுக்காக அரசிடம் ஒப் படைக்கப்பட்ட நிலப் பத்திரங்களை திருப்பி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் (10.3.2024) தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆங்கிலேயர் ஆட்சியில், 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியா விலிருந்து பர்மா, இலங்கை முத லான பல்வேறு காலனித்துவ ஆட் சிக்குட்பட்ட நாடுகளில் வேலை செய்ய ஒப்பந்த தொழி லாளர்களாக பலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு குடிபெயர்ந்தவர் கள் குடிபெயர்ந்த நாடுகளி லேயே தங்கி விட்டனர். ஆனால், அண்டை நாடான இலங்கையில் இவர்கள் நாடற்றவர்களாக இருந்ததாலும், பல்வேறு காரணங்களுக்காக தாய கம் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், 1964ஆ-ம் ஆண்டு இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட சிரிமாவோ – – சாஸ்திரி உடன்படிக்கையின்படி, 5 லட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலா ளர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி, இந்தியாவில் மறுவாழ்வு வழங் குவதாக இந்திய அரசு ஏற்றுக் கொண்டது.
1966 முதல்1984ஆ-ம் ஆண்டு வரை இலங்கையிலிருந்து ஏறக் குறைய
5 லட்சம் பேர் தாயகம் வந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு அப்போ தைய முதலமைச்சர் கலைஞரால் பயிற் சியுடன் வேலை வாய்ப்பும் தலா
ரூ.5 ஆயிரம் வியாபாரக் கடனும் வழங்கப்பட்டது. அத்து டன்வீடு கட்டுவதற்காக ஒரு குடும்பத் துக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ரூ.25 கோடி ரூபாய் அளவுக்கு கடனாக அளிக் கப்பட்டது. இக்கடனுதவி பெறுவ தற்கு இவர்கள் தமது நில ஆவணங் களை அரசிடம் ஒப்படைத்தனர்.
இவர்களது வறிய நிலையை கருத்தில் கொண்டு கடந்த 1974 முதல் 1999 வரை திருப்பி செலுத்திய கடன் தொகை போக மீதமுள்ள தொகையை அரசு தள்ளுபடி செய்ய முன் வந்தது. ஆனால் இக்கணக்கை நேர் செய்வதில் 15 ஆண்டுகளுக் கும் மேலாக தமிழ்நாடு அரசு நட வடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில், இப்பிரச்சி னைக்கு உடனடி தீர்வாக, கடன் பதிவுகளை நீக்கம் செய்து சீர்படுத்தி முறையாக நிலப் பத்திரங்களை உரியவர்களிடம் திரும்ப அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி கடனுக்காக அட மானம் பெறப்பட்டிருந்த ஆவ ணங் களை முதலமைச்சர் வழங் கினார்.
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள 9,742 தாயகம் திரும்பிய குடும்பத்தினர் பயன் பெறுவர்.
இதன்மூலம், தாயகம் திரும் பிய தமிழர்கள் அவர்களது பட்டா மாற்றவும், கடன் பெற வும், ரெப்கோ வங்கியின் சிறப்பு திட்டங்களின் மூலம் பயன் பெறவும் முடியும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பொதுத்துறை செயலர் க.நந்த குமார், அயலக தமிழர் நலத் துறை ஆணையர் பா.கிருஷ் ணமூர்த்தி ஆகியோர் பங் கேற்றனர்.

No comments:

Post a Comment