தமிழ்நாட்டை வஞ்சிக்காத இந்திய அரசு தேவை மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நல்ல முடிவு எடுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 8, 2024

தமிழ்நாட்டை வஞ்சிக்காத இந்திய அரசு தேவை மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நல்ல முடிவு எடுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

featured image

சென்னை, மார்ச் 8- சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.3.2024) தொடங்கி வைத் தார். அனிதா அச்சீவர்ஸ் அகா டமியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சிறப்பு ரையில்,

“அனிதா அச்சீவர்ஸ் அகா டமியின் சார்பில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால் எனக்குத் தனி மகிழ்ச்சி வந்துவிடும். ஏனென் றால், எல்லோருக்கும் தெரியும். என் மனதுக்கு நெருக்கமாக விளங்கும் ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்ததே இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த அகாட மியை நாம் தொடங்கினோம். இதுவரைக்கும் பத்து பேட்ச் பெண்கள், ஆறு பேட்ச் ஆண் கள் இங்கே பயிற்சி முடித்து, வேலைகளுக்குப் போயிருக் கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு என் றால், 816 பெண்கள் – 444 ஆண் கள் என்று மொத்தம் 1260 பேர் இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியால் நல்ல வேலை களுக்குப் போயிருக்கிறார்கள். இப்போது பெண்களுக்கான பதினொன்றாவது பேட்சில் 78 மாணவிகளும் – ஆண்களுக்கான ஏழாவது பேட்சில் 49 மாண வர்களும் – டெய்லரிங் ஏழாவது பேட்சில் 355 மகளிரும் என்று மொத்தம் 482 பேர் பயிற்சி முடித்திருக்கிறார்கள்.

அடுத்து, பெண்களுக்கான பன்னிரண்டாவது பேட்சில் 80 மாணவிகளும் – ஆண்களுக் கான எட்டாவது பேட்சில் 50 மாணவர்களும், டெய்லரிங் எட்டாவது பேட்சில் 360 பெண்களும் பயிற்சி பெற இருக்கிறார்கள். இப்படி உங் களுக்கான மடிக்கணினியும், சான்றிதழும் வழங்க மட்டும் இன்றைக்கு நான் வரவில்லை. பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதற்குப் பிற கும், திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறேன்.
இப்படி பார்த்து, பார்த்து, அடிப்படைக் கட்டமைப்பு களை மேம்படுத்துகின்ற திட் டங்களை நிறைவேற்றி, நம் முடைய கொளத்தூர் தொகு தியை மற்ற தொகுதிகளுக் கெல்லாம், அதாவது இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்க ளுக்கெல்லாம் எடுத்துக்காட் டாக இதை ஒரு மாடல் தொகுதியாக நினைத்துக் கொண்டு நீங்கள் செய்து காட்டவேண்டும் என்பதற்காக தான் அவர்களை எல்லாம் நான் அழைத்துக் கொண்டு வந் திருக்கிறேன்.

அதேபோல, கலைஞர் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு, கண் சிகிச்சை மய்யம் மூலமாக 750 பேருக்கு கண்ணாடி வழங் குவது, 250 மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத் தொகை வழங்குவது என்று ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கு வதற்காகவும் வந்திருக்கிறேன். இவையெல்லாம் கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத் தின் ஒரு பகுதியாக இருந்தா லும், கழகத்தின் சார்பில் செய் யப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் இங்கே வருகிறபோது, அருமை தங்கை அனிதாவின் தியாகத் தைப் பற்றி நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஏனென்றால், ஒடுக்கப்பட்ட சமுதாயங்களில் இருந்து முன்னேறி வருகின்ற நம்மை போன்றவர்களுக்கு சமூகத்தில் ஏகப்பட்ட தடை கள் பல வரும். அந்த தடைகளை நியாயப்படுத்தவும் பல பேர் இருப்பார்கள். படித்து முன் னேற ஆசைப்பட்டதே தவறு என்பது போலவும், சிலர் புலம் பிக் கொண்டு இருப்பார்கள், பேசிக் கொண்டு இருப்பார்கள். இதையெல்லாம் கடந்துதான் நாம் முன்னேறியாக வேண்டும்.

மகளிர் நாள்

மார்ச் 8 மகளிர் நாள்! முத லில் உங்களுக்கெல்லாம் என்னு டைய மகளிர் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் ஆதர வாக இருப்பவர்கள் பெண்கள். நீங்கள் தான். அப்படிப்பட்ட பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கின்ற நாள். அதைத்தான் மகளிர் நாளாக நாம் கொண் டாடிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அந்த நாளுக்கு முன்னாடி இத்தனை சகோ தரிகள் இங்கே பயனடைவதை பார்க்கின்றபோது உள்ள படியே எனக்கு பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசு என்பது மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, பல சாத னைகளை தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கிறது. நேரத்தின் அருமை கருதி ஒருசில முத் தாய்ப்பான திட்டங்களை மட்டும் இங்கே நான் பட்டி யலிட விரும்புகிறேன்…
கட்டணமில்லா ‘விடியல் பயணம்’ திட்டம்

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளுக்குப் போகின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற ‘புதுமைப்பெண் திட்டம்’
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’
தோழி விடுதி – வெளியூரிலி ருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருப் பவர்கள் ஏதாவது தனியார் விடுதிகளில் வாடகை கொடுத்து தங்கியிருந்தார்கள். அவர்களுக்கென்று ஒரு பாது காப்பாக தோழி விடுதி என்று ஒன்றை கட்டி, இன்றைக்கு மாவட்டம் முழுவதும் கட்டிக் கொண்டிருக்கிறோம். இப்படி ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

இந்த திட்டங்களால் நீங் களும், தமிழ்நாடும் முன்னேற் றம் அடைவதுதான் திராவிட மாடல் அரசுக்கும், இந்த முத்து வேல் கருணாநிதி ஸ்டாலி னுக்கும் பெருமை! இப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பல திட்டங்களை நாம் எவ் வளவோ செய்து கொண்டிருந் தாலும், ஆனால் அதே நேரத் தில் ஒன்றிய அரசின் ஒத்து ழைப்போ, நிதி உதவியோ இல்லாமல்தான் நாம் செய்து கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கின்ற ஒன்றிய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும். அதற்கான காலம் கனிந்து கொண்டு இருக்கிறது. அதற்கு உங்கள் எல்லோரு டைய ஆதரவும் தேவை; தயா ராகிவிட்டீர்களா! நம்முடைய திராவிட மாடல் அரசின் திட் டங்களை உங்கள் குடும்பத்தி னர், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!

தமிழ்நாட்டில் ஏற்பட்டி ருக்கின்ற விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவிட வேண்டும் என்றால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் நல்ல முடி வெடுக்க வேண்டும். அதுவும் கொளத்தூர் தொகுதியில் நான் கேட்க வேண்டிய அவ சியம் இல்லை. இது கொளத் தூர் தொகுதி. என்னுடைய சட்டமன்ற தொகுதி, மன்னிக்க வேண்டும் நம்முடைய சட்ட மன்ற தொகுதி. அப்படிப்பட்ட தொகுதியில் உங்களையெல் லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
மீண்டும் மகளிர் அத்தனை பேருக்கும் என்னுடைய மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்து நிறைவு செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment