குஷ்பு தனக்குத்தானே தேடிய அவமானம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 14, 2024

குஷ்பு தனக்குத்தானே தேடிய அவமானம்!

‘‘ஊசி மிளகாய்’’

பல கட்சிகளுக்குச் சென்று பா.ஜ.க.வில் சேர்ந்து, மகளிர் ஆணையத்தின் உறுப்பின ராகவும் பொறுப்பு வகிக்கிறார் குஷ்பு!
அவர் அரசியலில் கருத்துத் தெரிவிக்கும் போது, ஒட்டு மொத்த மகளிர் குலத்தையே கேவலப்படுத்தும் வகையில், தி.மு.க. அரசு – தமிழ்நாட்டு முதலமைச்சர் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு அளிக்கும் ஆயிரம் ரூபாய் தொகை குறித்து – ‘பிச்சைக்காசு’ வாங்குகிறார்கள் என்று கொச்சைப்படுத்திப் பேசியுள்ளது – அவர், சேரக் கூடாத இடந்தனில் சேர்ந்தவுடன் எவ்வளவு கீழிறக்கத்திற்குச் சென்று விட்டார் என்று நினைக்கையில் பெண்ணுரிமை பேசும் பெரியார் தொண்டர்கள் உள்பட அனைவருமே வெட்கித் தலைகுனிவர். ஒரு காலத்தில்

பெண்ணுரிமைக்கு வாதாடியவர். பெண்களையே பிச்சைக்காரிகள் என்று கூறுவது நியாயமா?
இன்றோ குபேரபுரிக்குச் சென்றுள்ளார் திருமதி குஷ்பு! பா.ஜ.க.தான் அதிகமான தேர்தல் பாண்டுகளை வாங்கிக் குவித்தது என்பது – இன்று உச்சநீதிமன்றத்தால் உலகறியும் உண்மையாகி ஊழலின் ஊற்றுக்கண் எங்கே இருக்கிறது என்று புரிய வைக்கும் நிலையில் – தி.மு.க. அரசு அதன் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை – நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளார்!

அது மட்டுமா குஷ்பு அவர்களே? தி.மு.க. அரசு தரும் நிதிக்கு தி.மு.க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்த பெயர் என்ன தெரியுமா?
“மகளிர் உரிமைத் தொகை” புரிந்து கொள்ளுங்கள். எனவே அது பிச்சைக் காசு அல்ல; உரிமைத் தொகை.
விதவைகள் – சதி மாதாக்கோயில் கட்டி வணங்கும் கலாச் சாரத்தைப் பெருமையாகப் பேசும் கட்சியில் காவியேறிய மேடை ஏறியதால் இப்படி வம்பை விதைத்து தேசிய அவமானத்தைத் அறுவடை செய்யலாமா? நாவடக்கம் தேவை.

No comments:

Post a Comment