56 அங்குல மார்பு அளவு உள்ள பிரதமர் என்ன செய்கிறார்? தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

56 அங்குல மார்பு அளவு உள்ள பிரதமர் என்ன செய்கிறார்? தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

இராமேசுவரம்,மார்ச் 21 – எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற் படையினர் இன்று (21.3.2024) அதி காலை கைது செய்துள்ளனர்.

நெடுந்தீவு அருகே 25 மீனவர்களும், மன்னார் அருகே 7 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் 5 விசைப்படகுகளை யும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதி காரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள னர். கடந்த வாரம் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தரப் பில் ஒன்றிய அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு வரும் சூழலில், மேலும், 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமேசு வரத்தை சேர்ந்த 2 விசைப்படகுகள், 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் மீண்டும் தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர் கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment