முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 நாள் தேர்தல் பிரச்சாரம் திருச்சியில் நாளை தொடங்குகிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 நாள் தேர்தல் பிரச்சாரம் திருச்சியில் நாளை தொடங்குகிறார்

featured image

சென்னை,மார்ச் 21 – மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 22 முதல் ஏப்ரல் 17 வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மார்ச் 22ஆம் தேதி தனது பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குகிறார் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள் ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்ட தகவல்:

2024 ஏப்ரல் 19 அன்று நடை பெற உள்ள மக்களவைத் தேர் தலையொட்டி, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் “இண்டியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்கிறார்.

அதன்படி, மார்ச் 22ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளி லும், மார்ச் 23ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம் தொகுதிகளிலும், மார்ச் 25ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளிலும் முதல மைச்சர் பிரச்சாரம் செய்கிறார்.

மார்ச் 26ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகளிலும், மார்ச் 27ஆம் தேதி தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும், மார்ச் 29ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளிலும், மார்ச் 30ஆ-ம் தேதி சேலம், கள் ளக்குறிச்சி தொகுதிகளிலும் முதல மைச்சர் பிரச்சாரம் மேற்கொள் கிறார்.

மார்ச் 31ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதி களிலும், ஏப்ரல் 2ஆம் தேதி வேலூர், அரக்கோணம் தொகுதிக ளிலும், ஏப்ரல் 3ஆம் தேதி திரு வண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய் கிறார்.

ஏப்ரல் 5ஆம் தேதி கடலூர், விழுப்புரம் தொகுதிகளிலும், ஏப்ரல் 6ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிகளிலும், ஏப்ரல் 7ஆம் தேதி புதுச்சேரியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 9ஆம் தேதி மதுரை, சிவ கங்கை தொகுதிகளிலும்,

ஏப்ரல் 10ஆம் தேதி தேனி, திண்டுக்கல் தொகுதிகளிலும், ஏப் ரல் 12ஆம் தேதி திருப்பூர், நீலகிரி தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார்.

ஏப்ரல் 13ஆம் தேதி கோவை, பொள்ளாச்சி தொகுதிகளிலும், ஏப்ரல் 15ஆம் தேதி திருவள்ளூர், வடசென்னை தொகுதிகளிலும், ஏப்ரல் 16ஆம் தேதி காஞ்சிபுரம் மற்றும் சிறீபெரும்புதூர் தொகுதிகளிலும், ஏப்ரல் 17ஆம் தேதி தென் சென்னை மற்றும் மத்திய சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு குறித்த நேரத்துக் குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கட்சியினர், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிக ளையும் ஏற்பாடு செய்திட வேண் டாம் என கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment