தேர்தல் பத்திர விவரங்கள் 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 18, 2024

தேர்தல் பத்திர விவரங்கள் 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

புதுடில்லி, மார்ச் 18 தேர்தல் பத்திர விவரங்களை 2018ஆ-ம் ஆண்டில் இருந்து வெளியிட உத்தரவிட வேண் டும் என்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 2019ஆ-ம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை இந்திய ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.

ஆனால், 2018ஆ-ம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதியில் இருந்தே தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடங்கி விட்டதாக ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு உச்சநீதிமன் றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
எனவே, 2018-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு தகவல்களையும் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment