உலகத் தாய்மொழி நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 21, 2024

உலகத் தாய்மொழி நாள்

featured image

தந்தை பெரியாரின் எழுத் துச்சீர்திருத்தம் தான் இணைய உலகில் 1990 களிலேயே ஆசிய மொழிகளில் தமிழ் கோலோச்சக் காரணமாக இருந்தது.
ஹிந்தி இணையத்தில் வந்த ஆண்டு 2011-லிருந்துதான்.
ஆனால் தந்தை பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தம் காரண மாக தமிழ் 40 ஆண்டு முன்பே இணையத்தில் ஆங்கிலம், பிரென்சு, ஜெர்மன் மொழிக ளுக்கு இணையாக இருந்தது
1935லிருந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருந் திய வரிவடிவத்தைப் புகுத்தி குடிஅரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினார் பெரியார்.
தந்தை பெரியாரின் நூற்றாண்டில் வரலாற்றுப் பிரகடனமாக அய்யா அவர்கள் உருவாக்கிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு, இனி, அரசாங்க அலுவலகங் களில் இந்த எழுத்துச் சீர்திருத்த முறைதான் பின்பற்றப்படும் என்று அப்போதைய முதல மைச்சர் எம்ஜிஆர் பெரியார் நூற்றாண்டை ஒட்டி நடை முறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment