பணமோசடி தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

பணமோசடி தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடில்லி,பிப்.7- டில்லியில் யூடியூப் சேனல் ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேனாள் ஒன்றிய நிதி யமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மாநி லங்களவை உறுப்பினர் கபில் சிபில் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசுகையில், “பணமோசடி தடுப்பு சட்டம் ஒரு புலனாய்வு முகமையின் மீது தன்னிச்சையான மற்றும் தடை யற்ற அதி காரத்தை வழங்கியுள்ளது. இது மற்ற அனைத்து விசாரணை நிறுவனங்களையும் விட மிகவும் சக்தி வாய்ந் தது. ஆனால் அந்த சட்டம் தற்போது முற்றிலும் தவறாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை ரத்து செய்து விட்டு சிறந்த சட்டத்தை மீண்டும் இயற்றுவோம் என்று கூறி வருகி றேன்.” -இவ்வாறு மேனாள் ஒன் றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

No comments:

Post a Comment