வேலியே பயிரை மேய்வதா? பாலியல் வன்கொடுமைப் பாதிப்புக்கு ஆளான பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நீதிபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

வேலியே பயிரை மேய்வதா? பாலியல் வன்கொடுமைப் பாதிப்புக்கு ஆளான பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நீதிபதி

அகர்தலா, பிப். 24- திரிபுரா மாநிலத்தில் வசிக்கும் 26 வயது இளம்பெண் ஒரு வர் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வரு கிறார். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரை அடை யாளம் தெரியாத ஒருவர் வீடு புகுந்து பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப் பட்ட பெண் இதுகுறித்து கணவரின் உதவியோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கடந்த 13.2.2024 அன்று பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிபதி பிஷ்வா டோஷ் தார் என்பவரிடம் வாக்கு மூலம் அளிக்க சென்றார். பாலியல் வழக்கு என்பதால் நீதிபதி தனி அறையில் வாக்கு மூலத்தை பெறுவார். அந்த வகையில் அந்த பெண்ணிடமும் நீதிபதி தனது தனி அறையில் வாக்குமூலம் பெற முனைந்துள்ளார்.
ஆனால் அந்த நீதிபதி, அறையில் உள்ள பாது காவலரை வெளியே அனுப்பியுள்ளார். அதன் பிறகு விசாரணையை தொடங்கிய நீதிபதி, அவரது இருக்கையில் இருந்து எழுந்து அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த நிகழ்வைக் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண வர் எழுத்துபூர்வமான கடிதத்தை வழக்குரைஞர் கள் சங்கத்தில் கொடுத்து உள்ளார். தற்போது இந்த விவகாரம் முக்கியம் பெற் றுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது. பாலி யல் வன் கொடுமையால் பாதிக்கப் பட்ட இளம் பெண் ஒருவர் வாக்குமூலம் கொடுக்க சென்ற இடத் தில், நீதி பதியால் பாலியல் தொல்லைக்கு ஆளான நிகழ்வு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment