அமெரிக்காவில் ரூ.41,000 கோடி கல்விக் கடனை ரத்து செய்தார் ஜோ பைடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 21, 2024

அமெரிக்காவில் ரூ.41,000 கோடி கல்விக் கடனை ரத்து செய்தார் ஜோ பைடன்

வாசிங்டன், ஜன.21 அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிய பலரும் அதனை திருப்பிச் செலுத்த முடி யாமல் அவதிப்பட்டனர். எனவே இந்த கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி அதிபர் ஜோ பைடன் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனை ரத்து செய்வதாக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.
இந்தநிலையில் சுமார் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41 ஆயிரம் கோடி) கல்விக்கடனை ரத்து செய்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் 74 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது ஆசிரியர், செவிலியர்கள் என அரசு ஊழியர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment