போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வரும் 19ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 11, 2024

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வரும் 19ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை,ஜன.11- ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி 9-1-2024 முதல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட் டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக நேற்று (10-1-2024) அறிவித்துள்ளனர் .
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர், முதல்-அமைச்சரின் அறிவு ரையை பெற்று தொழிற் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். தொழிற்சங்கங் களின் கோரிக்கைகளில் ஏற்கெனவே 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ் வொன்றாக நிறைவேற்றப்படும். வரும்
19-ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங் களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெறும். என தெரிவித்தார்.

No comments:

Post a Comment