பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 5, 2023

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (4.12.2023) மிக்ஜாம் புயலினால் சென்னை முழுவதும் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், பொது மக்கள் பாதிக்காத வண்ணம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி மய்யத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டதோடு மழைநீர் தேங்கும் பகுதிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், கோட்டப் பொறியாளர் ரவி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment