ஈரோடு பெரியார் மன்றத்தில் 41 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

ஈரோடு பெரியார் மன்றத்தில் 41 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது

featured image

ஈரோடு, டிச.31 இன்று (31.-12-.2023)ஈரோடு கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஈரோடு பெரியார் மன்றத்தில் 41 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடு த.காமராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.மாவட்ட கழக தலைவர் இரா. நற்குணம் தலைமையேற்று உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் மா. மணி மாறன், மாவட்டத் துணைத் தலைவர் வீ.தேவராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் து. நல்லசிவம், பொதுக் குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருஷ்ணன் கு.சிற்றரசு மாநகரத் தலைவர் கோ. திருநாவுக்கரசு மாநகர செய லாளர் தே.காமராஜ் காப்பாளர் சிவகிரி சண்முகம், சுயமரியாதை திருமண நிலைய அமைப்பாளர்
ப. சத்யமூர்த்தி, பெரியார் படிப்பக வாசகர் வட்ட செயலாளர் பி.என்.எம். பெரியசாமி, பெரியார் படிப்ப வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரபாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் ச. சசிகரன். திமுக பொறுப்பாளர் கு. இளங்கவி, மாவட்டம் மாணவர் கழக பொறுப்பாளர் குருவை மணிமாறன், திமுக கிழக்கு வாசல் மதிவாணன், ஆசிரியர் செல்வகுமார், திண்டல் டாக்டர் தமிழ் கொடி, ஈரோடு ந. சிவராமன், ஒன்றிய செய லாளர் குமார், வாசகர் வட்டம் சி.கிருஷ்ணசாமி ஆகியோர் முன் னிலை ஏற்று உரையாற்றினர்.பேராசிரியர் ப.காளிமுத்து ‘தந்தை பெரியார் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.

கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க. அன்ப ழகன் ‘பார்ப்பன பண்பாட்டு படை யெடுப்புகள்’ என்ற தலைப்பிலும், வழக்குரைஞர் பூவை.புலிகேசி ‘பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் வி.சி.வில்வம் ‘தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் சாதனைகள்’ என்ற தலைப் பிலும், மருத்துவர் குன்னூர் இரா.கவுதமன் ‘பேயாடுதல் சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம்’ என்ற தலைப் பிலும், புரபசர் ஈட்டி கணேசன் ‘மந் திரமா? தந்திரமா? அறிவியல் விளக் கம்’ என்ற தலைப்பிலும் தொடர்ந்து வகுப்பு எடுத்தனர்.

தந்தை பெரியாரைப் பற்றிய சில விளக்கங்களை எடுத்துக் கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொளியில் உரையாற்றினார். மாணவர்களும், கழக பொறுப்பா ளர்களும் உரையைக் கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத் தினார்.

No comments:

Post a Comment