ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடிக்கு வட்டி இல்லா கடன் - அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 24, 2023

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடிக்கு வட்டி இல்லா கடன் - அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு

சென்னை, டிச.24 தமிழ்நாட்டில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி யில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப் படவுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்குப் பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு, கோழி), மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன் படி, 2023-2024 வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது வேளாண் மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பினை செயல் படுத்தும் வகையில் கடந்த 18 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2023-2024 ஆம் நிதி யாண்டுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில் களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதனக் கடன்களுக்கு ஆண்டு குறியீடாக ரூ.1,500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment