மகிழ்ச்சியூட்டும் செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

மகிழ்ச்சியூட்டும் செய்தி

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு

 தமிழ்நாடு நிபுணர்களின் முக்கிய பங்கு

டேராடூன், நவ.29  உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் நேற்று (28.11.2023) இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். 

மீட்பு குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். உத்தரா கண்டின் உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரி செல்ல 106 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிஉள்ளது. இதை 26 கி.மீ. ஆக குறைக்கும் விதமாக, சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலை வுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கப் பட்டது. இதில் 2 கி.மீ. வரை சுரங்கம் தோண்டப்பட்ட நிலை யில், கடந்த 12-ஆம் தேதி   அதிகாலை சுரங்கப் பாதையின் நுழைவுவாயிலில் இருந்து 200 மீட்டர்தொலைவில் திடீரென மண்சரிவுஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக் குள் சிக்கிக்கொண்டனர். சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதையை மண் மூடியது. உள்பகுதியில் சுமார்ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு மண் சரிவு ஏற்படாத தால், அப்பகுதியில் தொழிலாளர்கள் பத்திரமாக இருந்தனர். 

ராட்சத இயந்திரங்கள்

உள்ளே சிக்கிய தொழிலாளர் களை மீட்க முதலில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்ற முயற்சி மேற் கொள்ளப் பட்டது. மேல் பகுதியில் இருந்து தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்ட தால், அந்த முயற்சி கைவிடப்பட் டது. பின்னர், டில்லி, குஜராத், ஒடிசா, உத்தரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ராட்சத துளை யிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மண் குவியலின் பக்கவாட்டில் துளை யிடப்பட்டது. கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பலவேறு இயந்திரங்கள் பழுதாகின. அமெரிக்க தயாரிப்பான ஆகர்இயந்திரம் மட்டும் மண் குவியலின் பக்கவாட்டில் 47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு இரும்பு குழாய்களை பொருத்தியது. ஆனால், அதிவேகமாக இயக்கிய தால் அமெரிக்க இயந்திரம் கடந்த 25-ஆம் தேதி உடைந்தது. அதை மீண்டும் பயன் படுத்த முடியாத நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த அந்த இயந்தி ரத்தின் 14 அடி நீள பிளேடு அறுக்கப் பட்டு முழுமையாக அகற்றப்பட்டது. 

‘எலி வளை’ ஆபரேஷன்

இதற்கிடையே, மாற்றுத் திட்டங் களும் பரிசீலிக்கப்பட்டன. சமதளம், மலைப் பகுதியில் எலிவளைபோல குடைந்து சிறிய சுரங்கம் தோண்டு வதில் வல்லவர்களான ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள் 24 பேர் டில்லியில் இருந்து வரவழைக்கப்பட் டனர். அமெ ரிக்க ஆகர் இயந்திரம் மூலம் ஏற்கெனவே பொருத்தப் பட்டிருந்த 47 மீட்டர் இரும்பு குழாய் பாதையில் ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள் 3 பேர் நேற்று முன்தினம் (நவ.27) இரவு நுழைந்தனர். ஒருவர் சிறியரக இயந் திரத்தால் சுரங்கத்தை தோண்ட, மற் றொருவர் மண் குவியலை அப்புறப்படுத் தினார். 3-ஆவது நபர் மண் குவியலை அள்ளி டிராலியில் நிரப்பினார். அந்த டிராலி நிரம் பியதும் வெளியே காத்திருந்த தொழிலாளர்கள், கயிறு மூலம் டிராலியை வெளியே இழுத்து மண்ணை அப்புறப்படுத்தினர். முத லில் அனுப்பப்பட்ட 3 ‘எலி வளை’ தொழி லாளர்கள் சோர்வடைந்த தும் அடுத்த மூவர் குழு சுரங்கப் பாதைக்குள் நுழைந்து பணியை தொடர்ந்தனர். 

இவ்வாறு 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டு வெற்றிகரமாக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட் டன. குழாயில் இருந்து தொழி லாளர்கள் சிக்கியி ருந்த சுரங்கப் பாதை பகுதியில் ஏறி, இறங்குவ தற்காக படிக்கட்டு அமைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, 41 தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்கு அந்த குழாய் வழியாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 வீரர்கள் நேற்று இரவு ஊர்ந்து சென்றனர். மீட்பு படையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் உள்ளே சென்றார். சுரங்கத்துக்குள் தொழி லாளர்கள் சிக்கியிருந்த இடத்தை அவர்கள் சென்றடைந்தனர். பின்னர், அவர்களுக்கு உடல்நல பரி சோதனைகளை மருத்துவர் செய்தார். முழு ஆரோக்கியத் துடன் இருந்த தொழிலாளர்கள் குழாய் வழியாக ஊர்ந்து வெளியேறினர். 

இவ்வாறு, முதல் தொழிலாளி நேற்று இரவு 8 மணி அளவில் பத்திர மாக வெளியே அழைத்து வரப் பட்டார். தொடர்ந்து, ஒவ்வொரு தொழிலாள ராக இரும்பு குழாய் வழியாக வெளியே வந்தனர். சோர் வாக இருந்த தொழிலாளர்கள் பிரத்யேக டிராலியில் படுக்க வைக் கப்பட்டு கயிறு மூலம் வெளியே இழுத்து மீட்கப்பட்டனர். முதலு தவி சிகிச்சைக்கு பிறகு, அனைவரும் உட னடியாக தனித்தனி ஆம்புலன் ஸில் சைனாலிசார் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துசெல்லப்பட் டனர். 

நலம் விசாரித்தார் முதலமைச்சர்

 ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் கடந்த சில நாட்களாக சம்பவ இடத் திலேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை கவனித்து வந்தார். உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி நேற்று சுரங்கப் பாதைக் குள் சென்று, மீட்கப்பட்ட தொழிலாளர் களிடம் நலம் விசாரித்தார். ‘சில்க்யாரா சுரங்கப் பாதைமீட்புப் பணியில் வெற்றி அடைந் துள்ளோம். தொழி லாளர்கள் பத்திரமாக மீட்கப்ப ட்டுள்ளனர்’ என்று எக்ஸ் வலைதள பதிவில் அவர் தெரிவித் துள்ளார். தொழிலாளர்களின் உறவினர் களும் சுரங்கப் பாதைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொழி லாளர்களை பார்த்ததும் அவர்கள் கண்ணீர் விட்டு கலங்கினர். 

தலைவர்கள் பாராட்டு

தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பல் வேறு மாநில ஆளுநர்கள், முதலமைச் சர்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.   

மீட்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங் கப்படும் என்று முதலமைச்சர் தாமி அறிவித்தார்.

 தமிழ்நாடு நிபுணர்களால் திருப்புமுனை 

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் ஈடுபட்டது. கடந்த 21ஆ-ம் தேதி இந்த நிறுவனத்தின் நிபுணர்கள், பிஆர்டி-ஜிடி5 என்ற இயந்திரம் மூலம் மண் குவியலில் துளையிட்டு, 6 அங்குலம் விட்டம் கொண்ட குழாயை தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை செலுத்தினர். மீட்புப் பணியில் இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை மிகச் சிறிய குழாய் வழியாக உலர் பழங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு நிபுணர்கள் பொருத்திய குழாய் வழியாக, சமைத்த உணவுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) நவீனகேமராவும் குழாய் மூலம் செலுத்தப்பட்டு, தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது கண்காணிக்கப்பட்டது. மீட்பு பணியில் தாமதம் இருந்துவந்த நிலையில், தமிழ்நாடு நிபுணர்கள் அமைத்த குழாய் மூலமாகவே தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப்பட்டதாக மீட்பு பணி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.  


No comments:

Post a Comment