சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் படத்திறப்பு

சென்னை, நவ.30- பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத் திறப்பு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் 397 ஆவது வார நிகழ்வாக 27.11.2023 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு இளவரசன் (ஆ.மா.தி.க.செ) ஏ.கண்ணன் (ஆ.மா.தி.க.இ.செ) முன் னிலையில் பாசறை  ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால் அழைப்பில் தி.மு.க 84ஆவது வட்ட செயலாளர் த.வ.லால், வி.பி.சிங் படத்தை அம்பத் தூர் தெற்கு பகுதி தி.மு.க. பொருளா ளர் கு.சங்கர் தலைமையில், திறந்து வைத்தார். நிகழ்வில் ஏ.கோபி (காங்), கருப்பசாமி, ஆறுமுகம், ஜெயசீலன், நாவரசு, ஹரிதாஸ், மீன்குமார், திரு நாவுக்கரசு, சாம்சுந்தர், சசிகுமார், சரத்குமார், சாமிக்கண்ணு, அரவிந் தன் ஆகியோர் கலந்து கொண் டனர். இறுதியில் கார்த்தி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment