இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

ராஜஸ்தானில்  'நீட்' தேர்வு 

பயிற்சி மாணவர் தற்கொலை

கோட்டா,நவ.29- ராஜஸ் தானின் கோட்டா நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் லட்சக் கணக்கான மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத் துவ நுழைவு தேர்வுகளுக்கு தயா ராவதற்காக வருகை தருகின் றனர். நீட் தேர்வு மய்யங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

எனினும், அவர்களில் பலர் படித்து வரும்போதே தற்கொலை செய்து கொள் ளும் அவலம் நடந்து வரு கிறது. படிப்பிற்கான அழுத் தம் மற்றும் மாணவர்களி டையே தோல்வி பற்றிய பயம் ஆகியவையே இதற்கு கார ணம் என பலரும் குற்றச்சாட்டு தெரிவிக் கின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங் காளத்தில் இருந்து ராஜஸ்தா னுக்கு நீட் தேர்வு பயிற்சி பெறுவதற்காக போரித் என்ற மாணவர் சென்றுள்ளார். அவர் கோட்டா நகரில் உள்ள பயிற்சி மய்யம் ஒன்றில் சேர்ந்து படித்து வந்திருக் கிறார். அவர் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள் ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (27.11.2023) மாலை அவருடைய அறை யில் தூக்கு போட்டபடி காணப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த, சக மாணவர்கள் மற்றவர்களின் உதவி யுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், அதில் பல னின்றி அவர் உயிரிழந்து விட்டார் என மருத் துவர்கள் கூறி விட்டனர்.

கடைசியாக 4 மணியள வில் அவரை மற்ற மாண வர்கள் பார்த்துள் ளனர். இதன்பின் 7 மணிக்கு பின்பும் அவர் அறையை விட்டு வெளியே வராத சூழலில், சந்தேகத்தின் பேரில் அறைக்கு சென்று பார்த்தபோது, இந்த விடயம் தெரிய வந்தது.

காவல்துறையினர் நடத்திய விசா ரணையில், தற்கொலை குறிப்பு எது வும் கைப்பற்றப்படவில்லை. ராஜஸ்தானில், இந்த ஆண்டில் நடந்த 28-ஆவது சம்பவம் இது ஆகும். கடந்த ஆண்டு கோட்டாவில் 15 பயிற்சி மாணவர்கள் தற் கொலை செய்தனர். 

நடப்பு ஆண்டில் இந்த எண் ணிக்கை அதிகரித்துக் காணப் படுகிறது. தொடர்ந்து   விசா ரணை நடந்து  வரு

கிறது. 


No comments:

Post a Comment