வரைமுறை இல்லாமல் பொய்சொல்லும் பிரதமரை நான் பார்த்ததில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

வரைமுறை இல்லாமல் பொய்சொல்லும் பிரதமரை நான் பார்த்ததில்லை

முதலமைச்சர் சித்தராமய்யா

அய்தராபாத், நவ. 14- கருநாடகா மாநிலத்தில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பாதியை நிறை வேற்றிவிட்டோம். ஆனால் அவர் கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் இன்னும் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மேடைதோறும் வரைமுறை இன்றி பொய்களைப் பேசும் பிரதமரை நான் பார்த்ததில்லை என்று கரு நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியுள்ளார்.

தெலங்கானா மாநில காங் கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி காமரெட்டியில் வேட்புமனு தாக் கல் செய்தார். இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்தது.  இந்த கூட் டத்தில் கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவும் பங்கேற்றார்.  இதையொட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கருநாடக முதல மைச்சர் சித்தராமையா, “காங் கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தெலங்கானா காங் கிரஸ் கட்சி அறிவித்த  6 உத்தரவாதங் களும் உடனடியாக நிறைவேற்றப் படும். கருநாடகாவில் ஏற்கெனவே 5 உத்தரவாதங்கள் செயல்படுத்தப்படு வதை அனைவரும் பார்க்க வேண்டும்.

கருநாடகாவுக்கு கே.சி.ஆர் வந் தால் அவரை நாங் களே அழைத்து சென்று காண்பிப்போம். கருநாடகா வில் 5 உத்தரவாத திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பி.ஆர்.எஸ்., பா.ஜ.க. என்ற வித்தியாசம் இல்லை, பி.ஆர்.எஸ் என்பது பா.ஜ.க பி.டீம். 

மோடி 100 முறை தெலங்கானா வுக்கு வந்தாலும், பாஜக வேட் பாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. பிரதமர் மோடி கருநாடகாவில் 48 கூட்டங்களை நடத்தியதையும், ரோட் ஷோ பிர மாண்டமாக பங்கேற்றார். அப்படி இருந்தும், பிரதமர் மோடி பிரச்சா ரம் செய்த இடமெல்லாம் காங் கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. வரைமுறையில்லாமல் பொய் களைச் சொல்லும் பிரதமரை இது வரை நான் பார்த்ததில்லை.

பொய் சொல்லும் பிரதமருக்கு தெலங்கானா மக்கள் புத்திசாலித் தனமாக தங்கள் வாக்குகள் மூலம் பாடம் புகட்டுவார்கள். மோடி ஆட்சியில் நாட்டின் பொருளா தார நிலை மோசமாகிவிட்டது.  

காமரெட்டி தொகுதியில் ரேவந்த் ரெட்டியால் முதலமைச்சர் கே.சி.ஆர் தோற்கடிக்கப்படுவார். காமரெட்டியைத் தவிர, கஜ்வேலி லும் முதலமைச்சர் கே.சி.ஆர் தோல் வியடைவார். தேர்தலில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.கவை நிராகரித்து, காங் கிரசுக்கு ஆசி வழங்க வேண்டும். ரேவந்த் ரெட்டி காமரெட்டியுடன்  கோடங்கல் ஆகிய இரண்டு இடங் களில் வெற்றி பெறும். 

பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 34  சதவீத இட ஒதுக்கீட்டை 25 சதவீதமாக குறைத்த பெருமை கே.சி.ஆரையே சாரும். கே.சி.ஆர் ஊழல் பணத்தை தேர்தலில் செலவு செய்து வருகிறார். கே.சி.ஆரின் பத் தாண்டு ஊழல் ஆட்சிக்கு விடை பெற வேண்டும்.

ஊழல் பணத்தில் வாக்குகளை வாங்க கே.சி.ஆர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டி தெலங் கானாவில் காங்கிரஸ் ஆட் சிக்கு வருவது உறுதி” என்றார்.

No comments:

Post a Comment