பீகார் மாநிலத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் 65 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

பீகார் மாநிலத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் 65 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல்

பாட்னா, நவ. 10-  அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் வகையில் பீகார் சட்டப் பேரவையில் (9.11.2023) இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

பீகாரில் பட்டியலினத்தோர், பழங்குடியினத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு அளவை 65 சதவிகிதமாக உயர்த்த அம்மாநில அமைச்சரவை அண் மையில் ஒப்புதல் வழங்கிய நிலை யில், அம்மாநில சட்டப் பேரவை யில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, பீகார் சட்டப் பேரவையில், ஜாதிவாரி கணக் கெடுப்பு தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்டது. அதனை தாக்கல் செய்த முதலமைச்சர் நிதிஷ் குமார், இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று சட்டப் பேரவையிலேயே அறிவித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அனுமதித்த 50 சதவீத இடஒதுக்கீடு என்ற உச்ச வரம்பையும் தாண்டி 65 சதவீதம் இடஒதுக்கீடு தர இந்த மசோதா வழிவகை செய்கிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடும் இருப்பதால் பீகாரின் புதிய இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மொத் தம் 75 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் சென்றுவிடும்.

புதிய சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு பிரேக் அப்: > பட்டிய லினத்தோர்: 20 சதவீதம் > பழங் குடியினர்: 2 சதவீதம் > இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: 43 சதவீதம் என்ற வீதத்தில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். 

தற்போதைய சூழலில் பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதம், ஓபிசிக்களுக்கு 12 சத வீதம், பட்டியலினத்தோருக்கு 16 சதவீதம் மற்றும் பழங்குடியினத் தவருக்கு 1 சதவீதம், பிற்படுத்தப் பட்ட வகுப்பின் மகளிருக்கு 3 சதவீதம் என்று இடஒதுக்கீடு கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக எழுப்பிய குரல்

இந்த மசோதா சட்டப் பேரவை யில் தாக்கல் செய்யப்பட்டபோது, மசோதாவில் 10 சதவீதம் பொருளா தார ரீதியாக பின்தங்கிய வகுப் பினருக்கான இடஒதுக்கீடு பற்றி ஏதும் குறிப்பிடப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த இடஒதுக்கீட்டில் எந்த ஒரு குழப்பமும் வந்துவிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment