பெரியார் விடுக்கும் வினா! (1148) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 8, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1148)

ஒரு தொழிலாளிக்கு எவ்வளவுதான் சம்பளத்தை உயர்த்தி அவன் கையில் கொடுத்தும் அவனுடைய மகன் படிக்காமலிருந்தால் தொழிலாளி மகன் தொழிலாளி தானே? அவனுடைய பிள்ளையைப் படிக்கும்படிச் செய்து விட்டால், அவன் மண் வெட்டியைக் கையில் எடுக்க மாட்டான்; கக்கூசு எடுக்க மாட்டான். பின் அந்த வேலைகளை யார் செய்வது என்று கேட்பீர்கள். மற்றவர்கள் செய்தால் என்ன? அவனே தலைமுறை தலைமுறையாகக் கக்கூசு எடுக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment