மூத்த தலைவர் சங்கரய்யா அவர்களுக்கு "மதிப்புறு முனைவர் பட்டம்" வழங்க ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதா? தமிழர் தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

மூத்த தலைவர் சங்கரய்யா அவர்களுக்கு "மதிப்புறு முனைவர் பட்டம்" வழங்க ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதா? தமிழர் தலைவர் பேட்டி

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், சிறப்புத் தகுதி - முதுமுனைவர் என்று சொல்லக்கூடிய டாக்டர் பட்டம் அளிப்பது என்பது, அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய பெருமைக்குரிய ஒன்று. ஆன்றவிந்த கொள்கைச் சான்றோர்களையும், தியாகம் செய்தவர்களையும் கவுரவப் படுத்துவதற்காக "மதிப்புறு முனைவர் பட்டம்" கொடுப்பது என்பது பல்கலைக் கழகங்களினுடைய உரிமைகளில் ஒன்று - நடைமுறைகளில் ஒன்று.

''தகைசால் தமிழர்'' விருதை முதலில் பெற்ற வரும் - வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் பாடுபட்ட தொழி லாளர்த் தலைவரும், சிறந்த முற்போக்குவாதியுமான 102 வயதான சங்கரய்யா அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற் காகவும், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகவும் அவருக்கு ''மதிப்புறு முனைவர் பட்டம்'' கொடுக்கவேண்டும் என்கிற தீர்மானத்தை பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழுவில் நிறைவேற்றினர். அதற்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய பிரதி நிதியாக அமர்ந்துகொண்டு தினமும் பஜனை செய்வது;  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பூணூல் மாட்டுவது என்ற புரோகித வேலையைச் செய்துகொண்டிருக்கின்ற ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். ஆளுநரின் இந்தப்  போக்கை வன்மையாக  கண்டிக்கின்றோம். அவருக்கு இல்லாத அதிகாரத்தில் எல்லாம் தலையிட்டுக் கொண்டிருக்கின்றார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி (20.10.2023)


No comments:

Post a Comment