செயற்கை நுண்ணறிவால் ஆயுள்காலம் அதிகரிக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

செயற்கை நுண்ணறிவால் ஆயுள்காலம் அதிகரிக்கும்

'செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் சில வேலை இழப்புகள் இருந்தாலும், வரும் தலைமுறையினர் 100 வயது வரை வாழ்வார்கள்' என ஜே.பி மோர்கன் சேஸ் & கோவின் சி.இ.ஓ ஜேமி டைமன் கூறினார்.

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிதி நிறுவனமான ஜே.பி மோர்கன் சேஸ், கடந்த பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 3,500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக விளம் பரம் வெளியிட்டிருந்தது. 

இதனிடையே, தனது பங்குதாரர் களுக்கு அனுப்பிய கடிதத்தில், 'அனைத்து பணியிடங்களையும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை கொண்டு நிரப்ப இருப்ப தாகவும், 300க்கும் மேற்பட்ட பயன் பாடுகள் இதில் அடங்கும். இது காலத் தின் தேவை' என குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பாக லண்டனில் ஜே.பி.,மோர்கன் சேஸின் சி.இ.ஓ.,வும், வங்கியாளருமான ஜேமி டைமன் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், எங்கள் நிறுவனத்தின் எதிர்கால வெற்றிக்கு முக்கியமானது. புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் மற்றும் இடர் மேலாண்மையை மேம்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப் படலாம்.

ஏ.அய்., தொழில்நுட்பத்தில் ஏராள மான நன்மைகளுடன், ஆபத்துக்க ளும் உள்ளன. தொழில்நுட்பம் மனித குலத்திற்கு நம்பமுடியாத விஷயங் களை செய்துள்ளது. ஆனால், அதே நேரம் விமானங்கள் விபத்துக்குள்ளா கின்றன. மருந்துகள் தவறாகப் பயன் படுத்தப்படுவது போன்ற ஆபத்து களும் நடக்கின்றன. கெட்டவர்கள் கையில் கிடைக்கும் போது கெட்ட விஷயங்களுக்கு ஏ.அய்., தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது.

ஏ.அய். தொழில்நுட்பம் சில வேலை களை மாற்றியமைக்கலாம். ஆனால் புதிய தொழில்நுட்பத்தில் எப்போதும் அப்படித்தான் இருக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தின் காரணமாக குழந்தைகள், புற்று நோய் இன்றி, 100 வயது வரை வாழப்போகிறார்கள். உண்மையில் வாரத்தில் மூன்றரை நாட்கள் மட்டுமே அவர்கள் வேலை செய்ய போகிறார் கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment