ஆளுநரை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

ஆளுநரை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீச்சு

 நஞ்சு தோய்ந்த எண்ணங்களுடன் நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப் பற்றாளர்கள்!

சென்னை, அக். 25- "நஞ்சு தோய்ந்த எண்ணங்களுடன் நயமாகப் பேசும் திடீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்" என்று ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

இந்த நிலையில், மருது சகோதரர்களின் நினைவு நாளை முன் னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தமிழ் நிலத்தின் உரிமை களைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக! சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடி யவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு!

கழக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கைவண்ணத்தில் 'தென்பாண்டிச் சிங்கம்' எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்கு வேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர் களது கதை நிலைத்திருக்கிறது.

தி.மு.கழக அரசு அமையும் போதெல்லாம் விடுதலை வீரர் களின் புகழ் திக்கெட்டும் போற் றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! இந்த கோட்சே கூட்டத்தைத் தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார்." 

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment