ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி எறிபந்து போட்டியில் முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 12, 2023

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி எறிபந்து போட்டியில் முதலிடம்

அரியலூர், அக்.12- பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி விளை யாட்டு மேம்பாட்டு மைதானத்தில் 9.10.2023 அன்று நடைபெற்றது.

அதில் அரியலூர், திருமானூர், டி.பழூர், செந்துறை, ஆண்டிமடம் ,ஜெயங் கொண்டம் ஆகிய ஆறு குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாண வர்கள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர் கள் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்து மாநில போட்டிகளில் பங்கு பெறத் தகுதி பெற்றனர். 

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரி யர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரை பள்ளித் தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள், பெற் றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினார் கள்.

No comments:

Post a Comment