விருத்தாசலம் ரயில் நிலையத்தில் கிடா வெட்டி ஆயுத பூஜை வழிபாடாம்!
விருத்தாசலம், அக்.25 விருத்தா சலம் ரயில்வே சந்திப்பில், கிடா ஆட்டை தண்ட வாளத்தில் வைத்து பலி கொடுத்து, ரயில்வே தொழி லாளர்கள் ஆயுத பூஜை வழிபாடு செய்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில் பணி புரியும் ரயில்வே தொழிலாளிகள் நேற்று முன்தினம் (23.10.2023) ஆயுத பூஜை விழாவை கொண் டாடினர். ரயில் இன்ஜின், ட்ராலி, தண்டவாளம், அலுவலகம், ரயில் பெட்டி, தளவாடபொருள்கள் மற்றும் நாள்தோறும் பயன்படுத்தும் ஆயுதங்களை சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு பூஜை செய்து வழிபட்டனர்.அதன்பின், நடப்பாண்டு விபத்தில்லாமல் பணியாற்ற வேண்டும் என்பதற்காக, கிடா ஆட்டை தண்டவாளத்தில் வைத்து பலி கொடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
-‘தினமலர்' இணையம், 24.10.2023
No comments:
Post a Comment