பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு : தாழ்த்தப்பட்டோர் 19.65 சதவீதம், பழங்குடி மக்கள் 1.68 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 63.14 சதவிகிதம், உயர் ஜாதியினர் 15.52 சதவீதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு : தாழ்த்தப்பட்டோர் 19.65 சதவீதம், பழங்குடி மக்கள் 1.68 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 63.14 சதவிகிதம், உயர் ஜாதியினர் 15.52 சதவீதம்

புதுடில்லி, அக்.3  பீகாரில்  63.14 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்தவர் கள் என்று ஜாதிவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

நாடு விடுதலை அடை வதற்கு முன்பாக ஆங்கி லேயர் ஆட்சியின் போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன்முறை யாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் நாடு முழுவதும் இடஒதுக்கீடு பின்பற்றப் படுகிறது. 

நாடு விடுதலையடைந்த பின்னர் ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர் பாக கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டு வந்தன. 1980, 1990களில் இடஒதுக்கீடு விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. ஆனா லும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படவில்லை. இதன் பின்னர் முந்தைய காங்கிரஸ் தலைமையி லான அய்க்கிய முற்போக் குக் கூட்டணி ஆட்சியின் போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அந்த புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை என்று பாஜக அரசு தெரிவித்து வரு கிறது.

இதனிடையே, பீகாரை ஆளும் அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தியது. இதற்கு எதி ராக பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனா லும் பிஹார் மாநில அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்தி முடித்து அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.1 கோடியாகும். இவர் களில் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் 63.14 சத வீதம் உள்ளனர். இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01 சதவீதமும் உள்ள னர். ஆக மொத்தம் மாநி லத்தில் உள்ள பிற்படுத் தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14 சத வீதம் ஆகும்.

.மேலும் மாநிலத்தில் வசிக்கும் பொதுப் பிரிவினர் 15.52 சதவீதமாக உள்ளனர். தலித் (தாழ்த் தப்பட்டோர் சமூக) மக்கள் 19.65 சதவீதமும், பழங்குடி இனமக்கள் 1.68 சதவீதமும் மாநிலத்தில் வசிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

மேலும், மத ரீதியான கணக்கெடுப்பு விவரத் தின்படி இந்துக்கள் 81.99%, முஸ்லிம்கள் 17.7%, கிறிஸ்தவர்கள் 0.05%, சீக்கியர்கள் 0.01%; பவுத்த மதத்தினர் 0.08%, இதர மதத்தினர் 0.12% பீகாரில் வசிக்கின்றனர்.

மாநிலத்தில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் 14.27 சதவீதம் வசிக்கின்றனர். யாதவ சமுதாய மக்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரி வைச் சேர்ந்தவர்கள். பீகார்  மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாத வும், யாதவ சமுதாயத் தைச் சேர்ந்தவர்தான்.

எனவே, இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் இதர பிற்படுத்தப் பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை 27 சதவீத மாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெறும் என்று தெரிய வந்துள்ளது.

மாநிலத்தில் 63.1 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிப்பதன் மூலம், மாநில மொத்த மக்கள் தொகை யில் 3இல் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டோர் எனத் தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment