‘இந்தியா’ என்ற பெயரை உச்சரிப்பதற்கோ எழுதுவதற்கோ ஒன்றிய அரசு அஞ்சுகிறது இரா.முத்தரசன் பாஜகமீது சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 6, 2023

‘இந்தியா’ என்ற பெயரை உச்சரிப்பதற்கோ எழுதுவதற்கோ ஒன்றிய அரசு அஞ்சுகிறது இரா.முத்தரசன் பாஜகமீது சாடல்

சென்னை,செப்.6 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: ஜி 20 மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட் டுள்ள விருந்துக்கான அழைப்பை இந்திய குடியரசு தலைவர் அனுப்பி இருக்கிறார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த அழைப்பிதழில், ‘பாரத குடியரசு தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்தியா’ என்ற நம் தாய் நாட்டின்  பெயரை உச்சரிப்பதற்கோ எழுதுவதற்கோ ஒன்றிய அரசு அஞ்சுகிறது. ஹிந்தி மொழியில் எழுதப்படும் பெயர்களை மொழிபெயர்க்கும் போது, அந்தந்த மொழிச் சொற்களில் மொழி மாற்றம் செய்வதற்கு பதிலாக, ஹிந்திச் சொற்களை அப்படியே எழுத வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் மட்டுமல்லாது சட்டங்களின் பெயர்களையும் கூட ஹிந்தியிலேயே எழுதும் முறை திணிக்கப்படுகிறது. ஹிந்தி மொழி அறியாத இந்திய மக்களை, அந்நியப்படுத்தும் ஒன்றிய அரசின் பொருத்தமற்ற அணுகுமுறையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு இராமுத்தரசன் குறிப் பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment