மணவிலக்கு கோரும் வழக்குகளில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

மணவிலக்கு கோரும் வழக்குகளில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, செப்.8 சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவரிடம் இருந்து மண விலக்கு கோரி, கீழமை நீதிமன் றத்தில் மனுதாக்கல் செய்திருந் தார். ஆனால் அவருக்கு, மண விலக்கு அளிக்கப்படவில்லை. சத்தீஷ்கர் உயர்நீதிமன்றத்திலும் அவரது மனு தள்ளுபடி செய் யப்பட்டது. அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்த ரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப் பட்டது.

பெண்ணின் வழக்குரைஞர் துஷாந்த் பரசார் வாதிடுகையில், கணவர் கொடுமைப்படுத்துவ தாகவும், அவரின் நடத்தையில் சந்தேகப்படுவதாகவும் கூறி னார்.  கீழ்மை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இதில் சரிவர கவனம் செலுத்தவில்லை என் றும் அவர் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள், அப்பெண் ணுக்கு மணவிலக்கு வழங்கி தீர்ப்பு அளித்தனர்.

மணவிலக்கு கோரும் பெண்ணுக்கும், அந்த ஆணுக்கும் 2002-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஒரு குழந்தை உள்ளது. 2006-ஆம் ஆண்டில் இருந்து இருவருக்கிடையே மோதல் நடந்து வந்துள்ளது. மனைவியின் நடத்தை பற்றி கணவர் சந்தேகப்பட்டுள்ளார். கொடுமைப்படுத்தி உள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை. புகுந்த வீட்டை விட்டு மனைவி வெளி யேறி விட்டார். 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கி றார்கள். கிட்டத்தட்ட அவர் களின் திருமண வாழ்க்கை முடிந்து விட்டது. நீதிமன்றம் மணவிலக்கு வழங்குவது மட்டும் தான் பாக்கி. கீழமை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் எந்திரத் தனமாகவும், பதற்றமாகவும் செயல்பட்டுள்ளன. இந்து திருமண சட்டத்தின் 13(1)(அய்ஏ) பிரிவு, என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து அளிக்கலாம் என்று கூறுகிறது. அந்த பிரிவின்படி, கொடுமைப் படுத்துதல் என்ற வார்த்தைக்கு நிர்ணயிக்கப்பட்ட அர்த்தம் எதுவும் இல்லை. அதனால், சூழ் நிலைக்கேற்ப அதை பயன்படுத் திக்கொள்ள நீதிமன்றங்களுக்கு உரிமை உள்ளது. கொடுமைப் படுத்துதல் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடும். பெண்ணுக்கு கொடுமையாக தெரிவது, ஆணுக்கு அப்படி தெரியாது. ஆகவே, பெண் மண விலக்கு  கோரும் வழக்குகளில், நீதிமன்றங்கள் மிகவும் பரந்த அணுகுமுறையுடனும், நெகிழ் வுத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். மகிழ்ச்சியின் இருப் பிடமாக இருக்க வேண்டிய வீடு, சண்டைக்களமாக மாறுகிறது. சண்டையை நேரில் பார்க்கும் குழந்தைகள் மனரீதியாக பாதிக் கப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இவ்வாறு நீதிபதிகள் கூறி யுள்ளனர்.

No comments:

Post a Comment