திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு,செப்.29 உலகப் பொது மறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில், தமிழ்நாடு அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1,330 திருக் குறள்களை ஒப்புவிக்கும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசாக தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வருகிறது. அதன்படி இந்த நிதி ஆண்டுக்கான திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,330 குறட்பாக்களையும் ஒப்பு விக்கும் திறன்கொண்ட மாணவ-மாணவிகள் திருக்குறள் முற்றோதல் விண்ணப்பத்தினை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்தினை வருகிற அக்டோபர் மாதம் 31-ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். இந்த தகவலை ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment