"இந்தியா"வைப் பார்த்து அலறும் ஹிந்துஸ்தானிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

"இந்தியா"வைப் பார்த்து அலறும் ஹிந்துஸ்தானிகள்!

பாணன்

"அவர்களுக்கு ஹிந்துஸ்தான் பிடிக்கும் ஆனால் இந்தியா என்ற பெயர் பிடிக்காது. ஏன் பிடிக்காது? இந்தியா என்பது ஆங்கிலேயர் வைத்த பெயர் என்பார்கள். பாரதம் என்பது யார் வைத்த பெயர் என்று கேள்வி கேளுங்கள், மதவிரோதி என்பார்கள். 

ஆரியர்களின் அனாதி பூமியான ஸ்டெபி புல்வெளிப் பிரதேசத்தின் பகுதிகள் அனைத்தும் இஸ்தானில் முடியும். இன்றும் அது இஸ்தானம் தான். (எ.கா.) கஜகிஸ்தான், கிரிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான். 

ஆகையால் தான் தேசபக்தி பாடலான சாரே ஹெகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா (அனைத்து ஊர்களிலும் சிறந்தது, ஹிந்துஸ்தான் எங்களது) என்று எழுதினார்கள். (எழுதியது இஸ்லாமிய கவிஞர் என்ற ஒரே வயிற்றெரிச்சலில் அந்தப்பாடலை கடந்த 9 ஆண்டுகளாக இவர்கள் பயன்படுத்தவில்லை)  இவர்கள் கூறும் பாரத பூமி, பாரத வர்ஷ், பாரதம் என்பதற்கு ஏதாவது சான்றுகள் உள்ளதா என்றால் ஒன்றுமே இல்லை. 

பிரம்மனின் மகனே பரதன் என்பார்கள், அவர்களே ராமனின் தம்பி பரதன் சிறப்பாக ஆண்டான். அதனால் தான் பாரதம் என்பார்கள். மீண்டும் அவர்களே இந்த பூமியின் சிறப்பான நூலான மகாபாரதத்தின் நினைவாக பாரதம் என்பார்கள். எப்படி இராமாயணத்திற்கு இந்தியா முழுவதும் பல கதைகளைக் கூறுகிறார்களோ அதுபோலத்தான் பாரதம் குறித்து இவர்கள் மேலே கூறிய அனைத்துமே கற்பனைக் கதைகளில் உருவானவைதான். 

கற்பனைக் கதைகளில் உருவான பெயர்கள் உணர்வெழுச்சியை எப்போதுமே ஏற்படுத்தாது. அதைப் பயன்படுத்தும் மக்களை உண்மையை உணராமல் மாயையிலேயே வைத்திருக்கும் மனப்போக்கைத் தந்துவிடும் 

 ஆகையால் தான் இவர்கள் பாரத், பாரத், பாரத் என்று அடித்துக் கொள்கிறார்கள். சூப்பர் மேன் சித்திரக்கதை அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. அதற்காக அமெரிக்காவிற்கு "யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் சூப்பர் மேன்" என்று வைக்கச் சொன்னால் அது நகைப்பிற்கிடமாகும்.   காரணம் சூப்பர் மேன் என்பது ஒரு கட்டுக்கதை,  சூப்பர் மேன் உருவாகக் காரணமே கற்பனையில் மக்களை கட்டிவைக்கத்தான். முதல் உலகப்போர் முடிந்த பிறகு அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவில் ஆண்டான் அடிமை வர்க்கத்திற்கிடையே சமத்துவப் பார்வை எழத்துவங்கியது.   இந்தச் சமத்துவப் பார்வை உரிமை முழக்கத்தை அமெரிக்க பூர்வீக குடிகளிடையே ஊட்டியது. இதை மட்டுப்படுத்த, அமெரிக்க பூர்வீக மக்களை ஒரு மாயையில் வீழ்த்த ஜெர்ரீ ஸ்னெகல் மற்றும் ஜோ ஷுஸ்டர் என்ற இரண்டு யூதர்களின் சிந்தனையில் உருவானதுதான் இந்த சூப்பர் மேன். 

இந்த காமிக் கதாபத்திரம் மக்களிடையே அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது, இருப்பினும் அது பொழுதுபோக்கு என்ற அளவில் அமிழ்ந்துபோனது. 

அதே போல் தான் இராமாயணம், மகாபாரதம் போன்றவைகளும் பவுத்த சமண தாக்கத்தில் இருந்து மக்களை கற்பனாவாதத்தின் பிடியில் இறுக்கி வைக்க உருவானதுதான் அந்த இரண்டு நூல்கள்.

இந்த நாட்டின் அனைத்து மூடநம்பிக்கைச் சங்கிலிகளின் கண்ணிகள் இந்த இரண்டு நூல்களின் கதாப்பாத்திரத்தில் பிணையப்பட்டிருக்கும். எங்கு கைவைத்தாலும் அந்த கண்ணிகள் உடைப்படும் போது சமூகச்சிக்கலாக வெடிக்கும் எடுத்துக்காட்டு இன்றும் பெரிதும் விவாதப் பொருளாகி அரசியல் களத்தை குழப்பி இருக்கும் ராமர் விவகாரம் 

 விடுதலைக்குப் பிறகு மக்களை விழிப்புணர்வடையாமல் இருக்க வைக்கவே 'ராம் மந்திர்' ஒரு மய்யப் புள்ளியாக துவக்கப்பட்டது. 

இன்று மோடி முதல் தெருமுனையில் சட்டவிதிமீறலில் ஈடுபடும் ஹிந்துத்துவ அமைப்பினர் வரை கத்துவது "பாரத் மாதாவுக்கு ஜே" - "ஜெய் சிறீராம்" 

இரண்டுமே கற்பனையில் உதித்தவை,  ஒரு ஆக்சன் திரைப்படம் பார்க்கச்சென்றால் திரைப்படம் முடியும் வரை அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் இருக்கும். அது இயல்பான ஒன்றுதான்.  எடுத்துக்காட்டாக 90களில் தொடர்ந்து வந்த ஜாக்கிசான் படமானாலும் சரி, இன்று வரும் "மிஸின் இம்பாஸிபில்" போன்ற படங்கள் ஆனாலும் சரி,  ஆனால் நாம் படம் முடிந்து வெளியேவந்து பல ஆண்டுகளாக இராமாயண - மகாபாரத கதாபாத்திரத்தின் தாக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இந்தியாவிற்கு வருவோம். இந்தியா என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்கிறார்கள். அது ஆங்கிலேயர்கள் அதாவது பிரிட்டிஸ்காரர்கள் வைத்த பெயர் அல்ல,  அது இம்மண்ணின் பூர்வீக குடிகளைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். மனித இனம் இடம் பெயர்ந்து பல கண்டங்களில் வாழ்ந்துகொண்டு இருக்கும் போது மனிதர்களை வகைப்படுத்த அடையாளச் சொல் தேவைப்பட்டது. லத்தீன் மொழியில் 'நிகர்' என்றால் கருப்பு என்று பொருள். அதுவே நீக்ரோ என்று கருப்பின மக்களின் அடையாளப் பெயராகிவிட்டது.   அய்ரோப்பாவில் உணவை சுவைப் படுத்த சுவையூட்டிகளான மசாலாக்களைத் தேடிய அவர்களது பயணத்தில் அரபு பாலைவன மக்களைக் கண்டார்கள். மங்கோலிய மஞ்சள் சிவப்பு கலந்த மக்களைக் கண்டார்கள், ஹிந்து குஷ் மலையைக் கடந்த போதுதான் கருப்பும் சிவப்பும் கலந்த பழுப்பு நிற வண்ண மக்களைக் கண்டார்கள்

அப்போது அவர்கள் இந்திய தீபகற்ப மக்களை அடையாளப்படுத்த 'இண்டிக்' என்று பெயர் வைத்தனர். இந்த இண்டிக் மக்கள் வாழும் பூமிதான் இன்றைய இந்தியா ஆகும். இண்டிக் என்பது பிரமிடுகளின் காலத்திற்கு முன்பிருந்தே கையாளப்பட்ட சொல் ஆகும்.  அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சொல்லப்பட்ட ஒரு சொல் ஆகும். இந்தியாவில் மசாலாவிற்காக பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான பொருள் மிளகு. இந்த மிளகு பதப்படுத்தப்பட்ட பிறகு அதன் வண்ணம் அடர்கருப்பு கலந்த நீலத்தில் இருக்கும், இதனை ஆங்கிலத்தில் இண்டிகா என்று அழைப்பார்கள். இந்தியாவில் பூர்வீகக் குடிகளின் பெரும்பாலான நிறம் அடர்கருநீலம் தான். ஆகையால் தான் இந்திய தீபகற்ப வாழ்மக்களை இண்டிக் மக்கள் என்று அழைத்தனர். ஆகையால் தான் கி.மு.310 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த மெகசுதனிஸ் தனது இந்தியாகுறித்த நூலுக்கு இண்டிகா என்று பெயர் வைத்தார். 

பவுத்த சகாப்தம் முடிந்து  புஷ்யமித்திர சுங்கன் என்ற பார்ப்பனர் வசம் மவுரியப் பேரரசு சென்றது, இண்டிகா என்ற பெயர் மறைந்து ஆரியவர்தம்.,  ஜம்புகதீவு,, தெங்கிசிகு, ஆர்யவர்தா, மற்றும் பாரத் என்று புழக்கத்தில் வருகிறது. பவுத்த காலத்தில் கூட மேலே உள்ள சொற்களில் ஒன்று கூட புழக்கத்தில் இல்லை. 

சான்றாக தாய் (Thai) மொழியில் வந்த திரைப்படம் அங்குலிமால். அங்குலிமால் என்ற இரக்கமற்ற வன்முறைக்குணம் கொண்ட ஒருவன் எப்படி புத்தரைக் கண்டு திருந்தி அவனை ஊரார் அடித்துக் கொலைசெய்யும் போது கூட வன்முறையை கையில் எடுக்காது மரணத்தை தழுவினான் என்பதுதான் அந்தப்படத்தின் கதை.

இந்தப் படத்தில் புத்தர் நடந்து சென்றுகொண்டு இருக்கும் போது அங்குலிமால் புத்தரை அழைப்பார், புத்தரோ அவனது அழைப்பை கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டே இருப்பார். ஆத்திரத்தில் புத்தர் முன்பு வந்து நின்று கொலை செய்யப் போகும் போது அவரின் முகத்தைக் கண்டு அதில் காணப்பட்ட அமைதியை முதல்முதலாக பார்த்த காரணத்தால் குழம்பிப் போய் வன்முறைக் குணத்தை விட்டு அமைதியாக நீங்கள் யார் என்று கேட்பான்.

அப்போது புத்தர் பதில் கூறுவார், "அயம் ஸ்ராவனா. ஃப்ர்ம் த லேண்ட் ஆப் நாகாஸ் (நான் நாகர்களின் பூமியிலிருந்து வந்த ஒரு இளைஞன்)" என்றுதான் பதில் கூறுவார். 

இந்தியா என்ற பெயரை சில அரசு நிறுவனங்களிலிருந்தும் ஏற்கெனவே அகற்றியிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Medical Council of India â¡ð¬î National Medical Council  என்றும், Planning Commission of India என்பதை "நிட்டி ஆயோக்" என்றும் மாற்றப்பட்டமை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே! இன்னும் ஏராளம் உண்டு.

அவர் பாரதம் என்றோ, ஆர்யவர்த்தம் என்றோ அல்லது ஜம்புகத்தீவு என்றோ குறிப்பிடவில்லை. கி.பி.6ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்திற்கு வந்த யுவாங் சுவான் தனது நூலில் எங்கும் பாரத நாடு என்று குறிப்பிடவில்லை. அந்தப் அந்த பகுதிகளை வைத்தே குறிப்பிடுகிறார். குஜ்ஜார்களின் பூமி, பல்லவா, கலிங்கா என்று தான் குறிப்பிடுகிறார். 

சுங்கன் ஆண்ட நாலந்தா பாடலிபுத்திரா மற்றும் சிந்து மாகாணத்தில் தட்சஷீலா(இன்றைய பாகிஸ்தான்)வைக்கூட அவர்  சிந்து என்றுதான் குறிப்பிடுகிறார். 

  ஒரு பரந்த நிலப்பரப்பு, அங்கு வாழும் மக்களை அடையாளம் காணும் வகையில் வைக்கப்பட்டச் சொல் - இந்திய தீபகற்பத்தின் பூர்வீக குடிகளின் அடையாளப் பெயர் இண்டிகா.

அதாவது விடுதலைக்கு முன்பு வடமேற்கே இந்துகுஷ் மலைத்தொடர் வடக்கே பனிசூழ் இமயம், கிழக்கே பரந்த வளமான வண்டல் கொண்ட வங்கத்தின் சதுப்பு நிலப் பகுதியையும், தென்கோடியில் குமரிமுனையையும் எல்லையாகக் கொண்ட இந்த தீபகற்ப பூமி இவர்கள் கூறும் ஒரே நாடான பாரதப் பூமியாக இருந்ததில்லை.

ஆனால், புத்தர் கூறிய நாகர்களின் பூமியாக இருந்தது, இதற்கு இன்றும் சான்றுகள் உள்ளன. 

பாகிஸ்தானில் உள்ள நாகபர்வதம் (கில்கித்),  நாகாசியாரத் (நானாசாகிப் சியாரத்) போன்றவையோடு, இந்தியாவின் மகாராட்டிரத்தில் உள்ள நாக்தானே, நாக்பூர், தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவில், நாகப்பட்டினம், கருநாடகாவில் உள்ள நாகனூர், நாகரி (நகரி - ஆந்திரா),  ராஜஸ்தானில் உள்ள நாகவுர்,  மத்தியப்பிரதேசத்தில் உள்ள நாகபட்ட, இன்றும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என மொத்தம் 2000-த்திற்கும் மேற்பட்ட பெருநகரம், நகரம், சிற்றூர், கிராமம் என்று நாக என்ற பெயரில் துவங்குகின்றன. அதனால் இந்த மண்ணை நாகர்களின் பூமி என்று புத்தர் கூறினார். இதையே அய்ரோப்பியர்கள். இண்டிகா என்று அடையாளப்படுத்தினர். 

அதன் தொடர்ச்சிதான் இந்தியா. 

இந்த மண்ணின் அடையாளம் இந்தியா. அதைத்தான் பாசிச பாஜக ஆட்சியை அகற்றிட நாட்டு நலனில் அக்கறைகொண்ட அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் தங்களது பெயராக சூட்டிக்கொண்டனர்.

வரலாற்றில் எங்குமே பாரதம் அல்லது பாரத் என்று கூறியதாக சான்றுகள் இல்லை. இவர்கள் கூறுவது எல்லாம் "நெருப்புக்கோழி மண்ணுக்குள் தலையைப் புதைத்துகொண்டு இதோ பாரதம்" என்று கூறுவது போலத்தான்.

இந்தியா என்ற பெயர் அவர்களை ஏன் கொதிக்க வைக்கிறது? திராவிடமண் என்பது அன்று ராஜாஜி முதல் சத்தியமூர்த்தி அய்யர் வரை சுட்டது, இன்று ஆளுநருக்கும் சுடுகிறது.

அதுபோல் தான் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் மீது வைத்த வன்மத்தை கூட்டணியின் பெயராக வைத்ததும் கொதிக்கின்றனர்.

மோடி இந்தியாவை பயங்கரவாத அமைப்புகளோடு ஒப்பிடுகிறார். அசாம் முதலமைச்சரோ இது ஆங்கிலேயர் வைத்த பெயர் என்று புலம்புகிறார், நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. உறுப்பினர் இந்தியாவின் பெயரை நீக்கி பாரதம் என்றே வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். 

ஆனால், இந்தப் பாரதத்திற்கான சான்றுகளை இன்றுவரை அவர்களால் தரமுடியவில்லை - கற்பனைக் காவியங்களைத் தவிர!

No comments:

Post a Comment