சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி - சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி - சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை!

புதுடில்லி, ஆக. 30 - "இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் படி, வழக்குரைஞர்களின் அலுவலகத் தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது" என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 28.8.2023 அன்று ரத்து செய்தது.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் நபரின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்தும் வகையில், இந்த தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ரவிந்த் குமார் அடங் கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவை என்ற அனுமானத்தின் அடிப்படையிலான சென்னை உயர்நீதிமன்றத்தின் பார்வை குறுகியது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்துத் திருமணச் சட்டத்தில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் மூலம் உட்பொதிக்கப்பட்ட பிரிவு 7A-, சுயமரியாதைத் திருமண முறையை அடிப்படையாகக் கொண் டது. இந்த பிரிவின்படி, இரண்டு இந்துக்கள் சடங்குகளைப் பின்பற்றாமல் அல்லது ஒரு மதத் தலைவரால் நிச்சயிக்கப்படாமல், தங்கள் நண்பர் கள் அல்லது உறவினர்கள் அல்லது பிற நபர்கள் முன்னிலையில் திருமணத்தை அறிவித்து, திருமணம் செய்து கொள்ளலாம். இது அய்ம்ப தாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலும் உள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் வழங்கிய ஒரு தீர்ப்பு, இந்த நடைமுறைக்கு எதிராக அமைந்தது.

"வழக்குரைஞர்கள் செய்துவைக்கும் திரு மணங்கள் செல்லாது; என்றும் சுயமரியாதைத் திருமணம் (சுயமரியாதைத் திருமணம்) இரகசி யமாக நடத்தப்பட முடியாது" என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பைப் பின்பற்றியே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யும் கடந்த 2023 மே 5 அன்று தீர்ப்பு வழங்கியது.

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் 2023 ஏப்ரலில் திருப்பூரில், வழக்குரைஞர்கள் முன்னிலையில் தனது தோழியை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். ஆனால், மணப்பெண்ணின் பெற் றோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “வழக்கு ரைஞர்கள் முன், அவர்களின் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது" என்று தீர்ப்பு வழங்கியது.

மேலும், "மனுதாரருக்கு சுயமரியாதை திரு மணம் நடந்ததாக சான்றளித்த வழக்குரைஞர்க ளிடம் பார் கவுன்சில் மூலமாக விளக்கம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும்; "இது போன்ற திருமணம் ஏதாவது நடந்ததாக சான் றிதழ் வழங்கியிருந்தால் அவர்களுக்கும் நோட் டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து, இளவரசன் உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு விசாரித்து திங்களன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், இந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 7கி-இன் (தமிழ்நாட்டில் பொருந்தும்) படி, சுயமரி யாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களுக்கு சிறப்பு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. நாக லிங்கம் எதிர் சிவகாமி வழக்கிலும் (2001) "7 ஷிசிசி 487' மூலம் பிரிவு 7கி' உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது; எனவே, இதன் அடிப்படை யிலான சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவையில்லை, என்று முக்கியமான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. "ஒவ்வொரு திருமணத்திற்கும் பொது நிச்சய தார்த்தம் அல்லது பொது அறிவிப்பு தேவை என்ற சென்னை உயர் நீதிமன்றம் பார்வை, அனுமானத்தின் அடிப்படையில் அமைந்ததாக வும்; திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள், குடும்ப எதிர்ப்பு அல்லது தங்களின் பாதுகாப்பு குறித்த பயம் போன்ற பல்வேறு காரணங்களால் பொது அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர்க்கலாம்; அதையும் மீறி, இது போன்ற சந்தர்ப்பங்களில், பொது அறிவிப்பைச் செயல் படுத்துவது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம்.

வயது வந்த இருவர்- சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்கு குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது கடினம் அல்ல. அதனை நீதிமன்றங்கள் பார்க்காமல் விடுவது, அரசியல மைப்பின் 21-ஆவது பிரிவு வழங்கும்-வாழ்க் கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகிவிடும்" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "வழக்குரைஞர்கள் பல திறன்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தின் அதி காரிகளாக, ஆலோசகராக, வழக்குரைஞராகச் செயல்படும்போது, திருமணங்களை முன்வந்து நடத்திவைக்கக் கூடாது. அதேநேரம் அவர்கள் தனிப்பட்ட முறையில் நண்பர்கள், உறவினர்கள், சாட்சிகள் என்ற அடிப்படையில் திருமணங்களில் பங்கு வகிக்க உரிமை உண்டு" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

No comments:

Post a Comment