தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு

விழுப்புரம், ஆக. 31- தமிழ்நாட் டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரு கிறது. இவற்றில், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீத முள்ள சுங்கச்சாவடிகளில் செப் டம்பர் 1ஆம் தேதியும் சுங்க கட்ட ணம் உயர்த்தப்படுகிறது.

இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள் ளது. நடப்பாண்டுக்கான கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச் சாவடிக ளில் செப்டம்பர் 1ஆம் தேதி (இன்று நள்ளிரவு) முதல் அமல் படுத்தப்படுகிறது. அதன்படி, திண் டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப் பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச் சாவ டிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

குறிப்பாக, மதுரை-அருப்புக் கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு இன்று நள் ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர பழைய கட்டணம் 

ரூ.85-இல் இருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.125இ-ல் இருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது. மாதாந்திர கட்ட ணம் ரூ.2 ஆயிரத்து 505இ-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.145இ-ல் இருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்று வர ரூ.220இ-ல் இருந்து ரூ.240 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4 ஆயிரத்து 385இ-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது.

இதேபோல் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர கட்டணம் ரூ.290இ-ல் இருந்து ரூ.320 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.440இ-ல் இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது. மாதாந்திர கட்டண மாக ரூ.8 ஆயிரத்து 770இ-ல் இருந்து ரூ.9 ஆயிரத்து 595 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470இ-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்றுவர கட்டணம் ரூ.705இ-ல் இருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 95-இல் இருந்து ரூ.15 ஆயிரத்து 420 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று பிற சுங்கச் சாவடிகளுக்கும் கட்டணம் தூரத் துக்கு தகுந்தவாறு மாற்றி அமைக் கப்பட்டு உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment