தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஏற்றும் வழக்குரைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்தும் நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது தலைமை நீதிபதி உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஏற்றும் வழக்குரைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்தும் நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது தலைமை நீதிபதி உறுதி

சென்னை, ஜூலை 25 -  நீதிமன்றங்களில் அம்பேத்கர் ஒளிப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் ஒளிப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

தலைமை நீதிபதியிடம் அண்ணல் அம்பேத்கர் ஒளிப்படம் அகற்றப்படக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை கடிதம் வழங்கி நேரில் வலி யுறுத்தினேன். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட் டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர் களின் ஒளிப் படத்தையும் அகற்ற உத்தரவிடப் பட வில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) எனத் தெரிவித்தார். இத்தகவல் வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்கள் அனை வருக்கும் தெரிவிக்கப்பட்டது" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

‘தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் தவிர்த்து வேறு எந்த தலைவர்களின் சிலைகள், படங்களையும் வைக்கக் கூடாது’ என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. இதனை தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்திருந்தன. மேலும் தமிழ்நாடு அரசு தலையிட்டு டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தன.

No comments:

Post a Comment