இது என்ன தொடர் விபரீதம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

இது என்ன தொடர் விபரீதம்?

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்

ராமேசுவரம், ஜூலை 20- ராமேசு வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் வலைகளை கடலில் வெட்டி வீசியதால், அவர் கள் கரை திரும்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசு வரத்திலிருந்து 16.7.2023 அன்று 150க்கும் மேற்பட்ட விசைப் படகு களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக் கச் சென்றனர்.

இந்த நிலையில், 16.7.2023 அன்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டிய டித்தனர். 

மேலும், 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் இருந்த மீன் பிடி வலைகளை கடலில் வெட்டி வீசினர். இதனால், பல்லாயிரம் ரூபாய் இழப்புடன் மீனவர்கள் 17.7.2023இல் கரை திரும்பினர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறு கையில், இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதல், கைது நடவடிக்கைகளை நிறுத்திட, அந்த நாட்டுடன் ஒன்றிய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment