குழப்பத்தை ஏற்படுத்துவது வளர்ச்சியை தடுப்பது இதுதான் தமிழ்நாட்டு ஆளுநரின் திட்டம் ஆங்கில இதழுக்கு முதலமைச்சர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

குழப்பத்தை ஏற்படுத்துவது வளர்ச்சியை தடுப்பது இதுதான் தமிழ்நாட்டு ஆளுநரின் திட்டம் ஆங்கில இதழுக்கு முதலமைச்சர் பேட்டி

சென்னை ஜூலை 15 -  தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப் பது ஆளுநருக்குப் பிடிக்க வில்லை. குழப்பம் ஏற்படுத்தி இந்த மாநிலத்தின் அமைதி யைக் கெடுக்க நினைக்கிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு முதலமைச்சர் அளித்த பேட்டியில் கூறியி ருப்பதாவது:

பாட்னா கூட்டம் 

கடந்த ஜூன் 23ஆ-ம் தேதி பாஜக-வுக்கு எதிரான எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பாட் னாவில் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில் பங்கேற்ற போது, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும், சில முக்கியமான ஆலோசனை களைக் கூறினேன். அதாவது, எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள் ளலாம். கூட்டணி அமைக்க முடியவில்லை என்றால் தொகு திப் பங்கீடு செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம். தேர்தலுக்குப்பின் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பா டாக இருக்க முடியாது. அரசி யல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது போன்று எழும் பிரச்சினைகளை சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக் கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளேன். மேற்கு வங்கத் தில் இடதுசாரிகளும், காங்கிர ஸும் ஆதரவாக இல்லாத நிலையில் இந்த முயற்சிகளில் மம்தா பங்காற்று வாரா? என்று கேட்டால், மம்தா இந்த அணி சேர்க்கையில் மிக முக் கியமான அணித் தலைவராக இணைந்துள்ளார். முரண்பாடு கள் என்பது மேற்கு வங்கத்தைப் பொறுத்தவை மட்டுமே. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரை இந்தியாவை நினைத்தே மம்தா முடிவெடுத்து பாட்னா கூட்டத்தில் பங்கேற்றார்.

தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடு

ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தது முதல் தமிழ்நாட்டில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத் துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். அவருக்குப் பலமுறை இதனை உணர்த்தி யாகிவிட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள் வதாகத் தெரியவில்லை. செந் தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி விடுத்த அறிக்கை, அரசியலமைப்பு நெறிமுறை களை மீறுவதாகும். இது நிர் வாக ஒழுங்கு மீறலாகும். ஒரு அமைச்சரை நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந் ததே தவிர, வேறு யாருக்கும் அதிகாரமில்லை. ஒரு அமைச் சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதால், அவரை தானே நீக்கி விடலாம் என்ற அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் ஆளுநருக்கு இல்லை. அதனை அவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெ ழுத்து போடாமல் வைத்துள் ளார். அவற்றை விரைந்து அனுப்ப வேண்டும். அதை விட்டுவிட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் ஆளுநர் மூக்கை நுழைத்து மூக்கறு பட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு வளர்வது, அமை தியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. ஏதாவது குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை. 

தொழில் முன்னேற்றம்

தமிழ் நாட்டை மேலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, 2024ஆ-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மிகப் பெரிய அள வில் நடத்த திட்டமிட்டுள் ளோம். இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சியை வடிவ மைப்பதில் முக்கிய பங்காற்றும் விதமாக 2030-2031ஆ-ம் நிதி யாண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளா தாரமாக மாற்றுவதை லட்சிய இலக்காக நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகி றோம். இந்த இலக்கை அடைய, ரூ.23 லட்சம் கோடி முதலீடு களை ஈர்த்தாக வேண்டும். 46 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் வேண் டும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வந்துள்ளது. இவ்வாறு முதல மைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment